'புதிய இந்தியா' உருவாக்க மோடி அரசு கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் இவைதான்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல புதிய மக்கள் நல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றும் வகையில் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
பிரதான் மந்திரி ஜன் தன் திட்டமாக இருக்கட்டும் அல்லது உஜ்ஜலா திட்டமாக இருக்கட்டும், அவை வேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
[ஜிஎஸ்டி எபக்ட்.. எல்இடி பல்புகள் விலை அடியோடு குறைந்தது.. மக்களுக்கு மகிழ்ச்சி!]
இந்திய ரயில்வேயில் இலவச வைஃபை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு 700 ரயில் நிலையங்களில் அவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன. கூகுளுடன் இணைந்து, இந்த சேவை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இதனால் 8 மில்லியன் மக்கள் பயன் பெறுகிறார்கள்.
டிஜிட்டல் இந்தியாவிற்கான ஊக்குவிப்பு செயல்பாடுகளால், பண பரிவர்த்தனை குறைந்து, டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இதனால் பண பரிவர்த்தனைகள் கணக்கிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பும் குறைந்துள்ளது.
டிஜி லாக்கர் என்ற திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு அரசு துறை ஆவணங்களை இவற்றில் சேர்த்து வைக்க முடியும். ஒரு யூசருக்கு தலா 10 எம்.பி இலவச ஸ்டோரேஜ் வசதி செய்து தரப்படுகிறது. இதனால் ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்கும் கஷ்டம் குறையும்.
UMANG என்ற பெயரில் மோடி அரசு கொண்டுவந்துள்ள செல்போன் ஆப் மூலமாக, பல்வேறு அரசுத்துறை சேவைகளை ஒரே ஆப்பில் மேற்கொள்ளப்படும். காஸ் புக்கிங், ஆதார், பயிர் காப்பீடு, பென்ஷன் திட்டம் போன்றவற்றை இவற்றின் வாயிலாக மேற்கொள்ள முடியும்.