மழைக்கால கூட்டத்தொடர்.. இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! அமளியா? அமைதியா?
டெல்லி: மழைக்கால கூட்டத்தொடர் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. ஆக.21ம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. ஏற்கெனவே பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க கோரியிருந்தன. இந்நிலையில் இன்றும் இது தொடர்பாக அமளி நடக்க வாய்ப்பு இருக்கிறது.
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. எனவே அது குறித்து விவாதிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருக்கிறது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் விவாதத்தை கோரி வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தில் கடந்த 3 வாரங்களாக அமளி ஏற்பட்டு வருகிறது.

அமளிகளுக்கு இடையில் கூட சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. எனவே இன்றும் இரண்டு மசோதாக்கள் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மீது உரிய விவாதம் நடத்தப்பட வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.












Click it and Unblock the Notifications