Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரும் காலத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை உயரப் போகிறது.. பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார், அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர உள்ளது குறித்து அவர் முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

டெல்லியில் இத்தனை காலம் இயங்கி வந்த நமது நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. அது தற்கால நவீன பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பது நீண்ட காலம் இருந்த புகாராக இருந்தது.

 MPs will increase in the coming time says PM Modi in new Parliament function

மேலும், 96 ஆண்டுகள் பழமையான இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் இல்லை. டெல்லி நிலநடுக்க மண்டலத்தில் 4ஆவது ஜோனில் இருக்கும் நிலையில், இது அவசியமாகிறது.

இந்தச் சூழலில் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பழைய கட்டிடத்தை இடிப்பதற்குப் பதிலாக அதற்கு அருகே புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கு 2019இல் அடிக்கல் நாட்டிய நிலையில், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. கொரோனா காலத்திலும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு கட்டுமான பணிகள் படுவேகமாக நடைபெற்றது.

 MPs will increase in the coming time says PM Modi in new Parliament function

பழைய நாடாளுமன்ற கட்டிடம் ஏற்கனவே முழுமையாக இருந்தது. அதாவது கூடுதல் எம்பிக்கள் யாரும் அமர முடியாத நிலை இருந்தது. வரும் காலத்தில் எம்பிக்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் இதைக் கருத்தில் கொண்டே புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே இந்தக் கட்டிடம் முழுமையாகக் கட்டப்பட்ட நிலையில், இதைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசும் போது பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். எம்பிக்களின் எண்ணிக்கை உயர்வது குறித்தும் அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதாவது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் என்பதைக் கருத்தில் கொண்டே புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டும் முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். தேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல எம்பிக்கள் சபதம் ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 MPs will increase in the coming time says PM Modi in new Parliament function

அவர் மேலும் கூறுகையில், "வரும் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரப் போகிறது. எம்பிக்கள் எண்ணிக்கை உயர உள்ளதால் அவர்கள் எங்கே அமர்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதனால் கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது." என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+