இனி ரொம்ப கஷ்டம்.. கமல் சொன்ன போது எல்லோரும் எதிர்த்தனர்.. அம்பானி என்றதும் சைலன்ட்!
Recommended Video
டெல்லி: நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு அறிவித்த திட்டம் ஒன்றை தற்போது ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பெரிய அளவில் செயல்படுத்த இருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மேன் முகேஷ் அம்பானி ஜியோஃபைபர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் வீடுகளுக்கு இணைய இணைப்பு வழங்கும் திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்குகிறது.
ஜியோஃபைபர் மூலம் வீடுகளுக்கு டீவியும், ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸும் வழங்கப்படும். ஜியோஃபைபர் இணைப்பை பெறுபவர்களின் வீடுகளுக்கு ஜியோஃபைபர் கேபிள் இணைப்பு கொடுக்கப்படும்.

என்ன பயன்
இந்த ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் உங்கள் கேபிளுக்கு மாற்றாக செயல்படும். அதேபோல் நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களுடன் இவர்கள் செய்ய உள்ள ஒப்பந்தம் காரணமாக அவர்களின் ஷோக்களை காசு கொடுக்காமல் நீங்கள் ஜியோஃபைபர் செட் ஆப் பாக்சில் பார்க்க முடியும்.

இன்னொரு அம்சம்
ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் மூலம் உங்கள் லோக்கல் கேபிள் சேனல்களை பார்க்க முடியும். அதேபோல் இதில் இன்னொரு முக்கியமான அம்சம் புதிய படங்கள் தியேட்டரில் வந்த அதே நாளில் நீங்கள் அதை ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் மூலம் டீவியில் அந்த படத்தை பார்க்க முடியும். ஆனால் இதற்கு 2020 மே வரை காத்திருக்க வேண்டும். காசு தர வேண்டியது இல்லை. மாத சந்தாவில் இது அடங்கும்.

எப்படி இயங்கும்
அதாவது ஜியோஃபைபர் கேபிள் மூலம் படம் உங்கள் வீட்டு டீவிக்கே வரும். அதுவும் தியேட்டரில் ரிலீஸ் ஆன அதே தேதியில் உங்கள் வீட்டிற்கு வரும். இதனால் எதிர்காலத்தில் இந்தியாவில் தியேட்டர் என்பது பெரிய அளவில் குறையும். தியேட்டர் வருமானமும் மொத்தமாக அடிவாங்கும். பெரிய மாற்றம் ஒரு வருடத்தில் நிகழும்.

இதேதான்
இதே திட்டத்தைத்தான் கமல்ஹாசன் தசாவதாரம் முதல் பார்ட் வெளியான போதும் குறிப்பிட்டார். டிடிஹெச் மூலம் விஸ்வரூபம் படத்தை வெளியிட 2013ல் அவர் திட்டமிட்டார். ஆனால் அவருக்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்களின் சங்கம் களமிறங்கி போராட்டம் செய்தது. இதனால் அந்த திட்டத்தை கமல்ஹாசன் அப்போது கைவிட்டார்.

முடியாது
இப்போதே அதே திட்டத்தை முகேஷ் அம்பானி பெரிய அளவில் நாடு முழுக்க செயல்படுத்த, கையில் எடுத்து இருக்கிறார். இதற்கு அவர் ஒருவருடம் மட்டுமே கால அவகாசம் கொடுத்துள்ளார். அடுத்த வருடம் மே மாதம் இது செயலுக்கு வரும். இந்தியாவிலேயே அவரின் நிறுவனம் மிகப்பெரியது மற்றும் அரசியல் சக்தி வாய்ந்தது என்பதால் இதற்கு எதிராக யாருமே இது வரை குரல் கொடுக்கவில்லை.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்?












Click it and Unblock the Notifications