உணவு, உதவியின்றி 13 மணி நேரம்.. குவைத் ஏர்போர்ட்டில் தவிக்கும் இந்திய விமான பயணிகள்.. என்னாச்சு
டெல்லி: மும்பையில் இருந்து இங்கிலாந்து செல்லும் விமானம் திடீரென குவைத்தில் தரையிறக்கப்பட்டது. இதில் பயணித்த பயணிகள் 13 மணி நேரத்திற்கு மேலாக குவைத்தில் இருப்பதாகவும், ஏர்போர்ட்டில் உணவு, உதவி எதுவும் இன்றி தவித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளுடன் பயணிகள் வாக்கு வாதம் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
மும்பையில் இருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு கல்ப்ஏர் என்ற விமான நிறுவனத்தின் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் திடீரென குவைத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் 13 மணி நேரத்திற்கும் மேலாக குவைத் ஏர்போர்ட்டில் உணவு, உதவி எதுவும் இன்றி பயணிகள் தவித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. விமான நிலைய அதிகாரிகளுடன் பயணிகள் வாக்கு வாதம் செய்யும் வீடியோக்கள் பரவி வருகின்றன. ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்து, அமெரிக்காவை சேர்ந்த பயணிகளுக்கு மட்டுமே தங்குவதற்கு இடம் ஒதுக்கப்பட்டதாகவும் இந்திய பயணிகளுக்கு தங்குவதற்கு இடம் ஒதுக்கவில்லை எனவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானம் திடீரென யூ டேர்ன் எடுத்து குவைத்தில் தரையிறக்கப்பட்டதாகவும், தரையிறங்குவதற்கு 20 நிமிடங்கள் முன்புதான் தகவல் தெரிவிக்கப்ட்டதாகவும் சொல்லப்படுகிறது. விமானத்தின் ஒரு என்ஜின் தீப்பிடித்தாகவும் இதனால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனினும், இது தொடர்பாக விமான நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க தூதரக அதிகாரிகள் விமான நிலையம் சென்றுள்ளனர். விமான பயணிகள் ஏர்போர்ட்டின் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமான நிலைய ஹோட்டல்களில் தங்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது வளைகுடா ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்று வருவதால் அந்த ஹோட்டல்களில் இடம் இல்லை. வருகை தந்ததும் விசா பெறும் வசதியின் கீழ் இந்தியர்கள் வரமாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளோம். உச்சி மாநாடு காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று மூடப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 மணி நேரமாக அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாக பயணிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக பயணி ஒருவர் கூறுகையில், "இங்கு 60 க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்கிறோம். இன்று காலை முதலே ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறையும் வந்து நாம் புறப்பட இருக்கிறோம் என சொல்கிறார்கள். நாங்கள் அனைவருமே நாளை பணிக்கு செல்ல வேண்டும். இங்கிலாந்தில் எங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். தூதரகத்தையும் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம்" எனக் கூறினார்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications