200 வழக்குகள்.. தேடப்பட்ட மும்பை அண்டர் வேர்ல்டு தாதா ரவிபுஜாரி.. தெ.ஆப்பிரிக்காவில் வசமாக வளைப்பு
டெல்லி: மும்பையில் 200க்கும் அதிகமான வழக்குகளில் தேடப்பட்ட நிழல் உலக தாதாக்களில் ஒருவரான ரவி புஜாரி தென்னாப்பிரிக்காவின் குக்கிராமம் ஒன்றில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய நிலையில் பிடிபட்டுள்ளார்.
மும்பை திரை உலகப் பிரபலங்களிடம் மிரட்டி பணம் பறித்தது உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வழக்குகள் ரவி புஜாரி மீது உள்ளன.

மும்பை திரை உலகப் பிரபலங்களிடம் மிரட்டி பணம் பறித்தது உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வழக்குகள் ரவி புஜாரி மீது உள்ளன.
இந்நிலையில் கடந்த ஆண்டு ரவி புஜாரி செனகலில் சிக்கினார். அந்தோனி பெர்னான்டஸ் என்ற பெயரில் தலைமறைவாக இருந்த நிலையில் ரவி புஜாரி சிக்கினார். ஆனால் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் தப்பி ஓடினார் ரவி புஜாரி.

இதனிடையே தென்னாப்பிரிக்காவின் குக்கிராமம் ஒன்றில் ரவி புஜாரி தலைமறைவாக இருப்பது இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த கிராமத்துக்கு சென்ற அதிகாரிகள் ரவிபுஜாரியை வளைத்து பிடித்தனர்.
இதனையடுத்து ரவிபுஜாரி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட இருக்கிறார்.












Click it and Unblock the Notifications