Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரிதாக வெடிக்கும் நரவானே புத்தக விவகாரம்.. உள்ளே வந்த டெல்லி போலீஸ்.. பாய்ந்த அதிரடி நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்தப் புத்தகம் இதுவரை வெளியாகாத நிலையில், அதன் நகல்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நரவானேவின் புத்தகத்திற்கு இதுவரை பாதுகாப்புத் துறை அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு வாரமாகவே அமளி தொடர்ந்து வருகிறது. இதனால் லோக்சபா தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படுகிறது. இன்று கூட காலை அவை தொடங்கியவுடனேயே எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அமளி தொடர்ந்ததால் அவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.

Naravane Book Delhi Police filled FIR Over Leak of Naravane Unpublished Book Four Stars of Destiny

காரணம் என்ன!

ராகுல் காந்தி கடந்த வாரம் லோக்சபாவில் உரையாற்றினார். அப்போது அவர் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே எழுதிய 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற புத்தகத்தில் இருந்து சில கருத்துகளைக் குறிப்பிட முயன்றார். இருப்பினும், சபாநாயகர் அதற்கு அனுமதி தரவில்லை. இது தொடர்பாகவே நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளி நிலவுகிறது.

அதாவது நரவானே புத்தகம் இதுவரை வெளியிடப்படவில்லை. பொதுவாக ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை அதிகாரிகள் எழுதும் புத்தகத்திற்குப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி தேவை. இதுவரை பாதுகாப்பு அமைச்சகம் நரவானே புத்தகத்திற்கு அனுமதி தராத நிலையில், ராகுல் அது குறித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டது. அங்கீகரிக்கப்படாத ஆவணங்கள் நாடாளுமன்றப் பதிவேட்டின் ஒரு பகுதியாக ஆக முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

இதற்கிடையே இந்த விவகாரத்தில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்னும் வெளியிடப்படாத புத்தகத்தின் நகல்கள் புழக்கத்தில் இருப்பது குறித்து டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. இந்தத் தகவல் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தித் தளங்களில் பரவியதை அடுத்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தப் புத்தகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து (பாதுகாப்பு துறை) தேவையான அங்கீகாரத்தைப் பெறவில்லை என்ற போதிலும், அதன் பிரதிகள் இணையத்தில் பரவியிருக்கிறது. இதன் அடிப்படையில் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. டெல்லி போலீசாரும் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர்.

சிக்கல் என்ன

இந்தப் புத்தகம் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் அச்சிடப்படக்கூடாது என்று இருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதன் பிரதியை மக்களவையில் காட்டியிருந்தார். அது நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

"ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் பிரதி, உரிய அனுமதி இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பரவுவதாகக் கிடைத்த தகவல்களை எடுத்துக் கொண்டு இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.. இந்தப் புத்தகம் சில ஆன்லைன் தளங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது போலத் தகவல் பரவிய நிலையில், அது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம்

கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி இந்தப் புத்தகத்தின் பிரதியை வெளிப்படையாகக் காட்டிய நிலையில், இது அரசியல் விவாதமாகவும் மாறியது. இதனால் லோக்சபா நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவானேவின் இந்த புத்தகத்தை பற்றி விவாதிக்கப் பயந்தே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி மக்களவைக்கு வரவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+