பூட்டானுக்கு ரூ.4500 கோடி.. தமிழகத்திற்கு ரூ.173 கோடி.. மத்திய அரசின் பாரபட்சத்தால் அதிர்ச்சி
டெல்லி: பூட்டான் நாட்டின் 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு நிதி உதவியாக, இந்தியா சார்பில் ரூ.4,500 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்புக்காக மத்திய வேளாண் துறை ரூ.173 கோடி மட்டுமே அறிவித்துள்ள இன்றைய தினத்தில்தான், பூட்டான் நாட்டுக்கான இந்த நிதி உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பூட்டான் நாட்டுக்கு ரூ.4,500 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும், அந்த நாட்டுடனான நீர் மின்சார ஒத்துழைப்பு இரு நாட்டு உறவுக்கான முக்கிய அங்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூட்டான் பிரதமர்
3 நாள் சுற்றுப் பயணமாக பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியை இன்று அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக, பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வந்த ஷெரிங்கிற்கு குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடி- ஷெரிங் ஆலோசனையின்போது, இரு நாட்டு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஐந்தாண்டு திட்டத்திற்கு நிதி உதவி
ஷெரிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தனது தேர்தல் வெற்றிக்கு முதன் முதலில், பாராட்டு தெரிவித்தது இந்திய பிரதமர் மோடிதான் என்றும், பூட்டான் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியா அளித்து வரும் தொடர் பங்களிப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். பூட்டானுக்கு இந்தியா செய்துள்ள நிதி உதவி அந்த நாட்டின் 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கானது. 2022ம் ஆண்டுவரை இந்த ஐந்தாண்டு திட்டம் செயல்பாட்டில் இருக்கும்.

நிதி ஒதுக்கீடு
இப்படியெல்லாம் பூட்டான் பிரதமருக்கு மரியாதை கொடுத்து, நிதி உதவியையும் வாரி வழங்கியுள்ள மோடி அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு வேளாண் துறை மூலம் வழங்கியுள்ள நிதி ரூ.173 கோடி மட்டுமே என்பதுதான் அதிர்ச்சியில் உச்சம். கஜா மத்திய அரசு தனது ஒவ்வொரு துறை சார்பில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது தெரிந்ததே. ஏற்கனவே மின்சார துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

குறைந்த தொகை
ஆனால், தென்னை, பலா, முந்திரி என வாழ்வாதார மரங்களை டெல்டா விவசாயிகள் இழந்துவிட்ட நிலையில், வேளாண்துறை வெறும் ரூ.173 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது, விவசாயிகளை அவமதிப்பதை போன்ற செயல். 20 ஆண்டுகள் பின் தங்கிப் போய்விட்ட டெல்டா மாவட்டங்களுக்கு சோளப்பொரியை தூவிவிட்டு, பூட்டானின் ஐந்தாண்டு திட்டத்திற்கு, அள்ளிக்கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்கள் விவசாயிகள்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications