இந்தியாவில் எந்த பிரதமரும் செய்யாத சாதனை.. பிரதமர் மோடி வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் தரமான சம்பவம்
டெல்லி: இந்தியாவில் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிற்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமராக பதவி வகிப்பது நரேந்திர மோடி தான். 11 ஆண்டுகளை கடந்து பிரதமராக உள்ள நரேந்திர மோடி, இந்த காலக்கட்டத்தில் 17 நாடுகளின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். இதன் மூலம் நான்கு பிரதமர்களின் உரைகளை சமன் செய்துள்ளார். அதாவது எந்த இந்திய பிரதமரும் இத்தனை நாடாளுகளின் நாடாளுமன்றத்தில் போய் உரையாற்றியது இல்லை. அந்த சாதனையை பிரதமர் மோடி நிகழ்த்தியுள்ளார்.
இந்தியாவில் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருதான் அதிகபட்சமாக 17 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார். தொடர்ந்து மூன்று முறை பிரதமராக இருந்தது. சுதந்திர இந்தியாவில் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான். அதன்பிறகு வந்தவர்கள் 10 ஆண்டுகளை யாருமே தாண்டவில்லை.. மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, ராஜீவ் காந்திக்கு பிறகு முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி பொறுப்பேற்றார்.

3வது முறை பிரதமர்
2019ம் ஆண்டிலும் முழு மெஜார்ட்டியுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பெறுப்பேற்றார். ஆனால் 2024ம் ஆண்டில் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பீகாரில் நிதீஷ்குமாரின் கட்சி, ஆந்திராவில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் கட்சி உள்பட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 3ஆவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். கடந்த 11 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் உள்ள நரேந்திர மோடி, கொரோனா காலக்கட்டத்தை தவிர மற்ற ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இதுவரை பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளார்.
17 நாடுகளின் நாடாளுமன்றத்தில் உரை
ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். முன்னதாக, இந்த 5 நாடுகள் பயணத்தில் கானா மற்றும் டிரினிடாட் டொபாகோ நாடுகளின் நாடாளுமன்றத்திலும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி இருந்தார். இவற்றையும் சேர்த்து கடந்த 11 ஆண்டுகளில் அவர் மொத்தம் 17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றியிருக்கிறார். இதில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளின் நாடாளுமன்றங்களும் உள்ளன.
அமெரிக்கா இங்கிலாந்தில் உரை
முக்கியமாக சொல்வது என்றால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நேபாளம், மங்கோலியா, பூடான் உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தியுள்ளார். அதேநேரம் முந்தைய காங்கிரஸ் பிரதமர்களில் மன்மோகன் சிங் 7 நாடுகளின் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தி உள்ளார்.
மோடி சாதனை
இதைப்போல இந்திரா காந்தி (4), ஜவஹர்லால் நேரு (3), ராஜீவ் காந்தி (2), நரசிம்மராவ் (1) ஆகிய முன்னாள் பிரதமர்களும் வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் உரையாற்றி இருக்கிறார்கள். இதன் மூலம் காங்கிரஸ் பிரதமர்கள் ஆற்றிய மொத்த நாடாளுமன்ற எண்ணிக்கையை (17) பிரதமர் மோடி சமன் செய்திருக்கிறார். பல்வேறு நாடுகள் அந்த நாட்டின் உயரிய விருதுகளை பிரதமர் மோடிக்கு வழங்கி உள்ளன. சர்வதே அளவில் மிகவும் ஈடுபாடு கொண்ட இந்திய தலைவர்களில் ஒருவராக பிரதமர் மோடி இருப்பதை இது காட்டுவதாக கூறப்படுகிறது.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
கருப்பு தங்கம் ஜாக்பாட்! புதினின் சீக்ரெட் ஆஃபர்.. உங்க கிச்சன் வரை ஊடுருவும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்!












Click it and Unblock the Notifications