Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீட் தேர்வு எழுத இன்னும் அப்ளை பண்ணலையா?இன்றே கடைசி..மிஸ் பண்ணாதீங்க ஸ்டுடண்ஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் கூடுதல் தகவல்களுக்கு nta.nic.in என்ற இணைய தளத்தில் அறிந்துக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ஆணையம் நடத்தி வருகிறது.

National Testing Agency has announced last Date of NEET 2023

தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டு காலமாக எழுந்து வரும் நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதியினை தேசிய தேர்வு முகமை அறிவித்தது.எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடக்கிறது.

அதன்படி 2023-2024ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் எழுதலாம். இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் கூடுதல் தகவல்களுக்கு nta.nic.in என்ற இணைய தளத்தில் அறிந்துக் கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

திமுக எதிர்கட்சியாக இருந்த போது நீட் தேர்வுக்கு விலக்கு கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. நீட் தேர்வினை ரத்து செய்வதற்கான ரகசியம் தங்களிடம்தான் இருக்கிறது என்று கூறி வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகள் மாணவர்கள் நீட் தேர்வுகள் எழுதியே மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர்.

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நூற்றுக்கணக்கான அரசுப்பள்ளியில் பயின்ற ஏழை மாணவர்கள் மருத்துவர்களாக சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு தமிழகத்தில் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த ஆண்டும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதித்தான் மருத்துவ படிப்புகளில் சேர வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+