கொரோனா பரவுவதை தடுக்க.. நாடு முழுக்க மார்ச் 31 வரை ரயில் சேவை ரத்து.. அதிரடி முடிவு
டெல்லி: நாடு முழுக்க, மார்ச் 31ம் தேதிவரை, அனைத்து வகை பயணிகள் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவைகள், ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே அறிவித்துள்ளது.
Recommended Video
அனைத்து பயணிகள் ரயில்களும் மார்ச் 25 வரை நிறுத்தப்படும். தற்போது வரை 400 மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயணத்தில் உள்ளன, அவை அந்தந்த நகரங்களை அடைந்ததும், வேறு எந்த ரயில் நிலையத்திலும், எந்த ரயிலும், பயணத்தைத் தொடங்காது.

பயணிகள் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை. இதனால், அனைத்து முக்கிய ரயில் நிலையங்களும் காலியாகிவிடும். ரயில்வே தொடர்ந்து, பணிநிறுத்தத்தை நீடிக்க வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க மார்ச் 25 ம் தேதி ரயில்வே வாரியம் கூடும் என்று ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

ஆனால், இன்று மதியம், ரயில்வே துறை மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளது. ரயில்வே வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, சரக்கு ரயில்கள் மட்டுமே மார்ச் 22 நள்ளிரவு முதல் மார்ச் 31 நள்ளிரவு வரை இயக்கப்படும். மற்ற அனைத்து வகை மெட்ரோ, பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் என அனைத்து வகை ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. இருப்பினும், குறைந்தபட்ச புறநகர் ரயில் சேவைகள் மற்றும் கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவை மார்ச் 22 நள்ளிரவு வரை தொடரும். அதன்பிறகு மார்ச் 31 நள்ளிரவு வரை இந்த சேவைகளும் கூட நிறுத்தப்படும் என்று இந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அனைத்து மாநிலங்களும் அத்தியாவசியமற்ற பயணிகள் இயக்கத்தை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த முடிவை அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கும் அமைச்சரவை செயலாளர் மற்றும் பிரதமரின் முதன்மை செயலாளருக்கு தெரிவித்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல பஸ்கள் இயக்கத்தையும் முழுமையாக ரத்து செய்ய தேவை எழுந்துள்ளது. அவரவர் அவரவர் ஊர்களில் இருப்பதே நல்ல முடிவாக இருக்க முடியும். இதுதான் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. அதேநேரம், சரக்கு ரயில் போக்குவரத்தில் பாதிப்பு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications