நீதித்துறையில் ஊழலா? கண் சிவந்த உச்சநீதிமன்றம்! பாட புத்தகங்களை திரும்ப பெறும் NCERT!
டெல்லி: நீதித்துறையில் ஊழல் என்கிற தலைப்பில் பாடப்பகுதி NCERT பாட புத்தகத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த பாட புத்தகங்களை திரும்ப பெற்று வருவதாக NCERT தெரிவித்திருக்கிறது.
நீதித்துறையை கொச்சப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியிருந்தார். இந்நிலையில், பாடப்புத்தகங்களை திரும்பப்பெறுவது குறித்து NCERT விளக்கமளித்துள்ளது.

NCERT 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில்தான் இந்த கருத்துக்கள் வெளியாகியிருந்தன. மொத்த 2.25 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டதாகவும், அதில், வெறும் 38 பிரதிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன என்றும், அதில் வெளியாகியிருந்த கருத்துக்கள் உள்நோக்கத்துடன் சேர்க்கப்பட்டவை அல்ல என்றும் NCERT விளக்கமளித்துள்ளது. மட்டுமல்லாது 38 புத்தகங்களை வாங்கியவர்களை தொடர்பு கொண்டு அந்த புத்தகங்களை திரும்ப பெற முயன்று வருவதாகவும் கூறியுள்ளது.
என்ன பிரச்சனை?
2026ம் ஆண்டுக்கான பாடபுத்தகத்தை NCERT வெளியிட்டிருந்தது. அதில் 8ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாட புத்தக்கத்தில், நீதித்துறையில் ஊழல் என்கிற தலைப்பில் பாட பகுதியை இணைத்திருந்தது. இதுதான் பிரச்சனைக்கு காரணம். நீதித்துறை குறித்து மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைக்கும் வகையில் இது இருப்பதாக கடும் அதிருப்தி எழுந்தது. இதனையடுத்துதான் தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications