கரோனா வைரஸ்.. 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை.. பிரதமர் ஆய்வு
டெல்லி: கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதற்கான சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உலகளாவிய பிரச்சினையான கரோனா வைரஸுக்கு இந்தியர்கள் பாதிக்கப்பட்டால் அதை கையாளும் நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார்.
சீனாவில் கரோனா வைரஸ் நோயால் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்துகின்றனர்.
நோய் அறிகுறி இருப்போருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்காக சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி உறுதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் அறிகுறி இருப்பதை அடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சீனா போல் இந்தியாவிலும் இந்த வைரஸ் நோய் பரவினால் அதை கையாளும் தயார் நிலை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் ஆய்வு செய்தார். இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில் இந்தியாவில் இது வரை யாருக்கு கரோனா நோய் பாதிப்பு ஏற்படவில்லை.
சீனாவில் இருந்து வந்த 7 பயணிகளின் ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஆய்வுக்கு அனுப்பப்பட்ட 4 பயணிகளின் ரத்த மாதிரி முடிவுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என வந்துள்ளது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி












Click it and Unblock the Notifications