கரோனா வைரஸ்.. 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை.. பிரதமர் ஆய்வு
டெல்லி: கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதற்கான சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உலகளாவிய பிரச்சினையான கரோனா வைரஸுக்கு இந்தியர்கள் பாதிக்கப்பட்டால் அதை கையாளும் நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார்.
சீனாவில் கரோனா வைரஸ் நோயால் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்துகின்றனர்.
நோய் அறிகுறி இருப்போருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்காக சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி உறுதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் அறிகுறி இருப்பதை அடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சீனா போல் இந்தியாவிலும் இந்த வைரஸ் நோய் பரவினால் அதை கையாளும் தயார் நிலை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் ஆய்வு செய்தார். இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில் இந்தியாவில் இது வரை யாருக்கு கரோனா நோய் பாதிப்பு ஏற்படவில்லை.
சீனாவில் இருந்து வந்த 7 பயணிகளின் ரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஆய்வுக்கு அனுப்பப்பட்ட 4 பயணிகளின் ரத்த மாதிரி முடிவுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என வந்துள்ளது.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications