உள்ளாடையை கழற்றக்கோரி நீட் தேர்வில் சர்ச்சை! மாணவிகளுக்கு மறுதேர்வு.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
டெல்லி: கேரளா கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வில் உள்ளாடைகளை கழற்றக்கோரி சர்ச்சை எழுந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட உள்ளதாக கூறி அதற்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஜூலை மாதம் 17 ம் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. 543 நகரங்களில் 3,800க்கும் அதிகமான மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

உள்ளாடையை கழற்றக்கோரி சர்ச்சை
தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் சோதனை என்ற பெயரில் கேரள மாநிலம் கொல்லம் மருத்துவ இன்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி வளாக தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடையை கழற்ற அதிகாரிகள் நிர்பந்தித்ததாக சர்சசை எழுந்தது.

மறுத்த தேசிய தேர்வு முகமை
இதனை துவக்கத்தில் தேசிய தேர்வு முகமை மறுத்தது. இருப்பினும் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய் உத்தரவு பிறப்பித்தது. அதோடு பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை காக்கும் தேசிய ஆணையம் சார்பில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

7 பேர் அதிரடி கைது
மேலும் பல்வேறு தரப்பினர் இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் சார்பில் கொட்டாரக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.

மாணவிகளுக்கு மறுதேர்வு
இந்நிலையில் தான் தற்போது தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு செப்டம்பர் மாதம் 4ம் தேதி மீண்டும் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு இ-மெயிலில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications