பாரிக்கர் அவர்களே! உங்கள் கனவு நனவாகியது.. ரஃபேல் விமானங்கள் வந்துவிட்டன.. வரவேற்க நீங்கள் எங்கே?
டெல்லி: 5 ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தடைந்த நிலையில் பாரிக்கரின் கனவு நனவாகிவிட்டதாக பெரும்பாலானவர்கள் தங்கள் வேதனையை ட்விட்டரில் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
இந்தியா- பிரான்ஸ் ஆகிய நாடுகளிடையே கடந்த 2016-ஆம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டன. அவற்றில் முதல் கட்டமாக 5 போர் விமானங்கள் இன்று இந்தியாவை வந்தடைந்தன.
அம்பாலா விமான படை தளத்திற்கு வந்த அந்த விமானங்களை இரு சுகோய் விமானங்கள் பாதுகாப்பாக அழைத்து வந்தன. இந்த நேரத்தில் மனோகர் பாரிக்கரை நினைத்து உருகும் டிவிட்டர்வாசிகள்.
ரஃபேல் போர் விமானங்கள் வருகை.. இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடக்கம்: ராஜ்நாத் சிங்
|
பிரான்ஸ்
கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியா- பிரான்ஸ் இடையே ரஃபேல் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் மறைந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், அவர் இன்று நம்முடன் இல்லையே!
|
மோடி
மனதில் பெருமிதம் பொங்குகிறது. நன்றி மோடி அவர்களே!
|
விமான தளம்
அம்பாலா விமான தளத்தில் கெத்தாக தரையிறங்கும் ரஃபேல்
|
ரஃபேல்
"பறவைகள்" பாதுகாப்பாக அம்பாலாவில் தரையிறங்கிவிட்டன. இந்தியாவில் கால் பதித்த ரஃபேல் போர் விமானங்கள், ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தத்தை படைக்கும்.
|
சந்தோஷம்
பாரிக்கர் அவர்களே உங்கள் கனவு நனவானது, இந்த சந்தோஷமான நேரத்தில் நீங்கள் இல்லாதது பெரும் வேதனையை தருகிறது.
|
இந்தியாவில் தரையிறங்கல்
5 ரஃபேல் விமானங்களும் இரு சுகோய் 40 எம்கேஐ விமானங்களுடன் பாதுகாப்பாக இந்தியாவில் தரையிறங்கியது.
|
கைகூப்பி
இந்த ரஃபேல் விமானங்களின் ஒப்பந்தம் மற்றும் வருகையின் பின்புலத்தில் மனோகர் பாரிக்கர் இருந்ததை யாராலும் மறக்க முடியாது. அவரை கைகூப்பி வணங்குவோம்.
|
சவுண்டு எப்படி இருக்கு!
சவுண்டு எப்படி இருக்கு என்கிறார் வசுந்தரா ராஜே.