தோஸ்த் சிந்தியா பற்றி மூச்சே விடாத ராகுல்..ஒரு ட்விட் பதிவு போட்ட சில நிமிஷத்தில் எத்தனை குத்து சாமீ
டெல்லி: காங்கிரஸில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா விலகியது பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்னமும் வாயே திறக்கவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இன்று ராகுல் பதிவிட்ட ட்வீட்டில் நெட்டிசன்கள் சரமாரி கேள்விகளை கொட்டி வருகின்றனர்.
Recommended Video
காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவி வகித்த போது அவரது தளகர்த்தர்களாக இருந்தவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் உள்ளிட்டோர். ஆனால் இந்த தளபதிகளுக்கான அரசியல் இடங்களைப் பெற்றுத் தருவதில் ராகுல் காந்தி வெல்ல முடியவில்லை.

ராகுல் காந்தியின் சகாக்கள் என்பதற்காகவே மூத்த தலைவர்களால் ஓரம்கட்டப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டனர் இளம் தலைவர்கள். இதனால் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியேவிட்டார். தமது தளபதி கட்சியில் இருந்து விலகியது குறித்து ராகுல் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் இன்று திடீரென ட்விட்டர் பக்கத்தில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்குக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து ஒரு பதிவு போட்டார். இந்த பதிவு போட்ட சில நிமிடங்களில் கேள்விக்கணைகள் சரமாரியாக ராகுலை நோக்கி பாய்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.
நேற்று எல்லாம் எங்கே இருந்தீங்க? தாய்லாந்து டிரிப் கேன்சலா? நீங்க அரசியலைவிட்டே போய்விடுங்க என்கிற எகத்தாள பதிவுகள்தான் இதில் ஏராளம். அத்துடன் சிந்தியாவே சேர்ந்துட்டார்.. நீங்க எப்ப பாஜகவுக்கு வருவீங்க? என்கிற கிண்டல் கேலிகள் இன்னொரு பக்கம்.
My best wishes to @capt_amarinder ji on his birthday. I wish him good health and happiness always.
— Rahul Gandhi (@RahulGandhi) March 11, 2020
அதேநேரத்தில் காங்கிரஸ் தலைமை ஏற்க வாருங்கள்.. உங்களால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்கிற கோரிக்கைகள்.. ஒரு பதிவை போட்டு ஓராயிரம் வசவுகளை வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.

-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி











Click it and Unblock the Notifications