இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் திரிபுகள்! ஆபத்தா? விஞ்ஞானிகள் விளக்கம்
டெல்லி: இந்தியாவில் NB.1.8.1 மற்றும் LF.7 என புதிய வகை கொரோனா வைரஸ் திரிபுகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்கள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இது ஆபத்தானதா? என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் NB.1.8.1 வகை கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டது. அதேபோல இந்த மாதம் குஜராத்தில் LF.7 கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் உலகின் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்த தாக்கம் திடீரென உயர்ந்திருக்கிறது. இந்தியாவிலும் புதிய தொற்று பரவல் தொடங்கியுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸின் இரண்டு புதிய வகைகள் இந்தியாவில் உருவாகியுள்ளதாக, இந்தியாவின் COVID-19 வைரஸ் மரபணு கண்காணிப்பு கூட்டமைப்பு (INSACOG) தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார மையமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த மாதம் சுகாதார மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "LF.7 மற்றும் NB.1.8 என்பது ஏற்கெனவே உள்ள கொரோனா வைரஸின் துணை பிரிவுகள்தான். இது ஆபத்தானதாகவோ, கவலைக்குரியதாகவோ நினைத்து அச்சப்பட வேண்டியதில்லை. ஆனால் இது கண்காணிப்புக்கு உரியதாகும். NB.1.8.1 ஆல் ஏற்படும் ஆபத்துகள் சர்வதேச அளவில் குறைவாகவே இருக்கின்றன.
தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களை கொண்டு பார்க்கும்போது, நாம் பயன்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளே இந்த வகை திரிபு வைரஸ்களுக்கு எதிராக உறுதியாக வேலை செய்யும்" என்று தெரிவித்திருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை அதிகம் பதிவு செய்யப்பட்ட கேஸ்கள், JN.1 வகை திரிபால் பாதிக்கப்பட்டவர்கள்தான். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 53% பேர் இந்த திரிபால்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கடுத்து BA.2 திரிபு கொரோனா வைரஸால் 26% பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஓமிக்ரான் திரிபு வைரஸ்களால் 20% பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இப்போது இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதற்கு காரணம் JN.1 திரிபு வைரஸ்தான். எனவே அச்சமடைய தேவையில்லை. வழக்கமாக மேற்கொள்ளப்படும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதுமானதுதான். கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுதல், மருத்துவமனைகள் அல்லது நெரிசலான இடங்களில் முககவசம் அணிதல், தொற்று பாதிப்பு அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்க ஜூனியர் டாக்டர்ஸ் நெட்வொர்க் அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் துருவ் சவுகான் கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications