வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை
: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் கோவா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிர மழைக்கு வாய்ப்பு உள்ளதால் சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. நாடுமுழுவதும் பல மாநிலங்களில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. மும்பையில் கனமழை பெய்து வருவதால் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. மும்பை, தானே, பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும்.

எங்கெங்கு கனமழை
காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆகஸ்ட் 4, 5ஆம் தேதிகளில் கொங்கன், கோவா, மும்பையில் தீவிர, அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதே போல மத்திய மகாராஷ்டிரா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்
குஜராத்தில் ஆகஸ்ட் 5 மற்றும் ஆறாம் தேதிகளில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல கடலோர கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம் பகுதிகளிலும் அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை
தமிழ்நாட்டை பொருத்தவரைக்கும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலைமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளுக்கு போகாதீங்க
ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல், தென்கிழக்கு கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா மேற்கு வங்கம், அந்தமான் கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் நான்கு நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications