ஜேஎன்யூ தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது.. பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.. நிர்மலா சீதாராமன் கோபம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    செய்தி தெரியுமா | 06-01-2020 | Morning News | oneindia tamil

    டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார் .

    நேற்று மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளது.

    Nirmala Sitharaman condemns attack in Jawaharlal Nehru

    இது குறித்து டிவிட் செய்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜேஎன்யூ நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. அங்கிருந்து வரும் போட்டோக்கள் அதிர்ச்சி தருகிறது. எனக்கு தெரிந்தவரை. ஜேஎன்யூ என்றால் காரசார விவாதம் மட்டும்தான். அங்கு எப்போதுமே கலவரம் நடந்தது இல்லை. ஆனால் தற்போது நிலை அப்படி இல்லை.

    அங்கு நடந்த கலவரத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன். மத்திய அரசு உடனடியாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். என்ன நடக்கிறதோ தெரியாது, நாடு முழுக்க அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் டிவிட் செய்துள்ளார்.

    நிர்மலா சீதாராமன் ஜேஎன்யூவில் படித்த முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த கலவரம் குறித்து ஜேஎன்யூ மாணவர் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளனர். அதில், ஜேஎன்யூ தாக்குதல் கவலை தருகிறது. இந்த கலாச்சாரத்திற்கு எதிரான தாக்குதல் இது. மாணவர்களை இப்படி தாக்குவது வருத்தம் அளிக்கிறது, என்று கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+