கடனுக்கான தவணையை கேட்கும் போது கடுமை காட்டக் கூடாது! வங்கிகளுக்கு கடிவாளம் போட்ட நிர்மலா சீதாராமன்
டெல்லி: கடனுக்கான மாதத் தவணையை திருப்பிக் கேட்கும் போது கடுமை காட்டக் கூடாது என அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு கடிவாளம் போட்டிருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், சில வங்கிகளின் ஊழியர்கள் கடனை வசூலிக்கும் போது இரக்கமற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள் என தனக்கு புகார்கள் வருவதாகவும் அதனால் கடனை திருப்பிக் கேட்கும் போது வங்கிகள் கடுமையாக நடந்துக் கொள்ளக் கூடாது என தாம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்கி ஊழியர்கள் என்ற பெயரில் தனியார் வங்கிகளிலிருந்து குண்டர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு அத்துமீறும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
தனியார் வங்கிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களும் கடனை வசூலிக்கிறோம் என்ற பெயரில் செய்யும் அட்டூழியங்களுக்கு குறைவே இல்லை. அண்மையில் கூட புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மாதத் தவணை செலுத்தவில்லை எனக் கூறி ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தவரின் 11 வயது மகளை கடத்திச் சென்று முத்தூட் நிதி நிறுவன ஊழியர் அதிர்ச்சி கொடுத்தார்.
அதேபோல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு மாதம் இ.எம்.ஐ. செலுத்தவில்லை எனக் கூறி வீட்டிலிருந்த பொருட்களை வீதியில் தூக்கி வைத்த எக்விடாஸ் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். இது போன்ற பல உதாரணங்களை கூறலாம்.
இந்தச் சூழலில் மாதத் தவணையை திருப்பிக் கேட்கும் போது கடுமை காட்டக் கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சர் அறிவுறுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications