தர்மத்தின் வழியில் ஆட்சி.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் சொன்ன மகாபாரத ஸ்லோகத்தின் அர்த்தம் என்ன?
டெல்லி: 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின் போது மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள சமஸ்கிருத ஸ்லோகங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் கற்க கசடற என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
இரண்டாவது முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அது போல் மத்திய நிதியமைச்சராக 4ஆவது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலை செய்தார்.

பட்ஜெட்
தமிழகத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன் அவரது பட்ஜெட் உரையில் திருக்குறள், ஆத்திச்சூடி போன்றவற்றிலிருந்து வரிகளை எடுத்து மேற்கோள்காட்டுவார். கடந்த 2019- 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டினார். பாண்டிய மன்னன் அறிவுடைநம்பியைக் காணச் சென்ற புலவர் பிசிராந்தையார் அரசன் சிறப்படைய இந்த பாடல் வரிகளை பாடினார்.

என்ன பாடல்
"காய்நெல் அறுத்து கவளம் கொளினே, மாநிறைவு இல்லதும் பல்நாட்டு ஆகும்" என்ற புறம்- 184 ஆவது பாடலை மேற்கோள்காட்டினார். அதாவது நெல்லை அறுத்து யானைக்கு உணவு சமைத்து போட்டால் அது பல நாட்களுக்கு உணவாகும். ஆனால் யானையே சாப்பிட்டு கொள்ளட்டும் என நினைத்து அதை நெல்வயலில் இறக்கினால் பசிக்கு உண்பதை விட காலில் மிதிபட்டு வீணாவதுதான் அதிகமாக இருக்கும். அது போல் குடிமக்களிடம் அரசே முறையாக வரி வாங்கினால் கோடியாக செல்வம் வளரும் என்று விளக்கினார்.

மேற்கோள்காட்டிய அமைச்சர்
அது போல் கடந்த 2020- 2021-ஆம் ஆண்டு ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன் அடுத்த ஆண்டு 2021- 2022 ஆம் ஆண்டு "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு" என்ற திருக்குறளையே உதாரணமாக கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த முறை அவர் தனது பட்ஜெட்டில் மகாபாரத வரிகளை மேற்கோள்காட்டினார்.
Recommended Video

12 ஆவது பருவம்
மகாபாரதம் 18 பருவங்களில் 12 ஆவது பருவமான சாந்தி பருவத்தில் 72ஆவது ஸ்லோகத்தை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார். இந்த ஆண்டு வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். பீஷ்மர் வழங்கிய அறிவுரை சாந்தி பருவத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் மன்னன் குடிமக்களின் நலனை உறுதி செய்ய சிறிதும் தாமதமின்றி அத்தனை ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். தர்மத்தின் வழியில் ஆட்சி நடத்த வேண்டும். தர்மத்தின் வழிநின்றே வரி வசூலிக்க வேண்டும்.என அர்த்தம் வரும் பாடலை மேற்கோள்காட்டினார். அதாவது இந்தியா, மகாபாரதம் போன்ற இதிகாச நூல்களில் இருந்து பெற்ற அறிவின்படியே வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. நிலையான கணிக்கக் கூடிய வரிவிதிப்பு என்ற மத்திய அரசின் கொள்கையை முன்னெடுக்கும் வகையில் மத்திய பட்ஜெட் 2022-23-ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்த (Economic reforms) அறிவிப்புகள் இருக்கும் என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications