கைலாசாவில் சுனாமியா பூகம்பமா?.. நீங்கள் பண்றதை பார்த்தால் அப்படிதான் இருக்கு.. நித்யானந்தா "கோபம்"

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கைலாசாவில் ஏதோ சுனாமியோ பூகம்பமோ வந்துவிட்டது போல் நீங்கள் செய்வதெல்லாம் இருப்பதாக பக்தர்கள், சீடர்களிடம் நித்தியானந்தா செல்லமாக கோபித்துக் கொண்டார்.

அன்றாடம் வீடியோவில் சொற்பொழிவு ஆற்றி வரும் நித்யானந்தாவை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதனால் அவர் இறந்துவிட்டதாக ஹேட்டர்ஸ் சிலர் வதந்தி பரப்புவதாக கூறி ரஜினி படத்தில் வரும் "திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என்ற டயலாக்குடன் தொபுகடீரென சமூகவலைதளத்தில் தோன்றினார்.

பின்னர் 27 மருத்துவர்கள் என்னை சுற்றி இருக்கிறார்கள். என் உடலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்கிறார். எல்லா ரிப்போர்ட்களும் நார்மலாக இருக்கிறது என்கிறார். ஆனாலும் இவர் எதை சாப்பிட்டாலும் வாந்தி வருகிறது என்கிறார். என்ன காரணம் என தெரியவில்லை. நான் நிர்வ கல்பி சமாதி நிலையில் இருப்பதாக சொல்கிறார்.

Recommended Video

    பணம் அனுப்ப வேண்டாம்.. Nityananda-க்கு என்ன ஆச்சு? #Nithyananda | Oneindia Tamil
    எதற்காக 27 மருத்துவர்கள்

    எதற்காக 27 மருத்துவர்கள்

    ஆனால் எதற்காக அவரை சுற்றி இத்தனை மருத்துவர்கள், இத்தனை ரிப்போர்ட்கள், மருத்துவ பரிசோதனைகள், எம்ஆர்ஐ ஸ்கேன்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. தனது நாடு சிறிய தீவு என்பதால் பெரிய மருத்துவமனை இருந்தால் உடல்நிலை தேறும் என மருத்துவர்கள் கூறுவதாக கூறும் நித்யானந்தா, கூடவே ஒரு பிட்டையும் போடுகிறார்.

    இயற்கை பேரிடர்

    இயற்கை பேரிடர்

    அதற்காக யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்கிறார். அடுத்த போஸ்ட்டில் பணம் அனுப்புவதை நிறுத்துங்கள், இயற்கை பேரிடர்களான சுனாமி, பூகம்பம் ஏற்பட்டதை போல் பணத்தை அனுப்பி வருகிறீர்கள். அதை நிறுத்துங்கள். சொத்துகளை விற்று பணம் அனுப்புவதாக கேள்விப்பட்டேன், இதெல்லாம் வேண்டாம் என்கிறார்.

    அறக்கட்டளைகளுக்கு குவியும் பணம்

    அறக்கட்டளைகளுக்கு குவியும் பணம்

    உலகம் முழுவதும் உள்ள அறக்கட்டளைகளுக்கு நிறைய பணம் குவிவதாக கூறும் நித்யானந்தா, அந்த பணத்தை மீண்டும் அவரவர் கணக்குகளே அனுப்பும் வேலையை ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. மேலும் ஒரு வேலை அடிக்காதே அடிக்காதே என அரசியல்வாதிகள் சொன்னால் அடி என அர்த்தம். அது போல் இவரும் பணம் அனுப்பாதே என்றால் பணம் அனுப்பு என்ற அர்த்தமா என தெரியவில்லை.

    கைலாசா எங்கே

    கைலாசா எங்கே

    உடலும் மெலிந்த நிலையில் காட்சியளிக்கிறார். இதுவும் ஏன் என தெரியவில்லை. கைலாசா எப்படி எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறதோ அதே போல்தான் நித்யானந்தாவின் உடல்நிலை குறித்த விஷயங்களும் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. ஒரு வேளை இன்டர்போலீஸ் இவரை தேடுவதால் இது போன்ற நாடகங்களை நடத்துகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+