மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமே இல்லையாம்.. கைலாசா எங்கே இருக்கிறது.. துப்பு கொடுத்த நித்தியானந்தா
டெல்லி: கைலாசா எங்கே இருக்கிறது என்பது குறித்து தனது சொற்பொழிவில் நித்தியானந்தா துப்பு கொடுத்துள்ளார்.
நித்தியானந்தா- பிடதி ஆசிரமம் நடத்தி வந்த இவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்தார். விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் அவர் திடீரென தலைமறைவாகிவிட்டார்.
ஒரு நாள் வீடியோவில் தோன்றி தான் கைலாசா எனும் தீவை விலைக்கு வாங்கிவிட்டதாகவும் அங்குதான் தான் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இவர் சொல்லும் இந்த கைலாசா எனும் தீவு எந்த கண்டத்தில் இருக்கிறது என்பது கூட தெரியவில்லை.

பக்தர்கள்
எனினும் அவர் தினந்தோறும் தனது பக்தர்களுக்கு போடும் வீடியோவின் ஐபி அட்ரஸ்ஸை வைத்து கண்டறிய போலீஸார் திட்டமிட்டனர். ஆனாலும் அவர்களது முயற்சிகள் வீணாகின. இந்த நிலையில் கைலாசா நாட்டுக்கு தான் அதிபர் என நித்தியானந்தா பிரகடனப்படுத்திக் கொண்டார்.

கைலாசாவில் குடியேற பாஸ்போர்ட்
மேலும் கைலாசாவில் மக்கள் குடியேற பாஸ்போர்ட், கைலாசாவுக்கான தனிக்கொடி, கரன்சி ஆகியவற்றையும் நித்தி அறிமுகப்படுத்தினார். கொரோனா, லாக்டவுன், பொருளாதார நெருக்கடி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என எதை பற்றியும் கவலைப்படாமல் நித்தியானந்தா தனி உலகத்தில் வாழ்ந்து வருவதால் கைலாசாவுக்கு செல்ல இளைஞர்கள் விருப்பமனுக்களை தாக்கல் செய்துவருகிறார்கள்.

கைலாசாவில் தொழில் தொடங்க
அது போல் கைலாசாவில் தொழில் தொடங்கவும் பலர் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த நிலையில் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை அவர் சூசகமாக ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். அதாவது கைலாசாவில் நித்தியானந்தாவின் அறைக்கு கதவுகளே கிடையாதாம்.

மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமில்லை
மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமே நித்தியானந்தாவுக்கு இல்லையாம். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தனது அறைக்கு வந்து தன்னுடன் எதை பற்றி வேண்டுமானாலும் கலந்துரையாடலாம் என்கிறார். ஊஞ்சலில் படுத்து கொண்டு பனி படர்ந்த மலையையும் கடலையும் ரசிப்பாராம்.
Recommended Video

பனிமலையும் கடலும் ஒன்றாக இருக்கும் இடம்
எனது வீடியோவை பார்க்கும் மக்கள் பனிமலையும் கடலும் ஒன்றாக எங்கே இருக்கிறது என கூகுளில் தேட ஆரம்பித்திருப்பார்கள் என நித்தியானந்தா கிண்டல் செய்துள்ளார். நிஜமாகவே கைலாசாவில் கடலும் பனிமலையும் இருக்கிறதா என தெரியவில்லை. தன்னை பரமசிவன் என சொல்லிக் கொள்ளும் நித்தியானந்தா, கைலாசா மாலையில் சிவபெருமான் பனிமலை, கடல் இருக்கும் இடத்தில்தான் இருப்பார். இதை எத்தனையோ சினிமாக்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஒரு வேளை இந்த படத்தில் வரும் சீனை மனதில் வைத்துக் கொண்டு பொழுதுபோக்கிற்காக அப்படி சொன்னாரா என தெரியவில்லை. எது எப்படியோ எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... எதுவும் இல்லைன்னாலும் ஆளுறேன் என்ற பாடலுக்கு ஏற்ப தனிக்காட்டு ராஜாவாகவே நித்தி வாழ்ந்து வருகிறார் போங்கள்!
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications