மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமே இல்லையாம்.. கைலாசா எங்கே இருக்கிறது.. துப்பு கொடுத்த நித்தியானந்தா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கைலாசா எங்கே இருக்கிறது என்பது குறித்து தனது சொற்பொழிவில் நித்தியானந்தா துப்பு கொடுத்துள்ளார்.

நித்தியானந்தா- பிடதி ஆசிரமம் நடத்தி வந்த இவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்தார். விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் அவர் திடீரென தலைமறைவாகிவிட்டார்.

ஒரு நாள் வீடியோவில் தோன்றி தான் கைலாசா எனும் தீவை விலைக்கு வாங்கிவிட்டதாகவும் அங்குதான் தான் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இவர் சொல்லும் இந்த கைலாசா எனும் தீவு எந்த கண்டத்தில் இருக்கிறது என்பது கூட தெரியவில்லை.

பக்தர்கள்

பக்தர்கள்

எனினும் அவர் தினந்தோறும் தனது பக்தர்களுக்கு போடும் வீடியோவின் ஐபி அட்ரஸ்ஸை வைத்து கண்டறிய போலீஸார் திட்டமிட்டனர். ஆனாலும் அவர்களது முயற்சிகள் வீணாகின. இந்த நிலையில் கைலாசா நாட்டுக்கு தான் அதிபர் என நித்தியானந்தா பிரகடனப்படுத்திக் கொண்டார்.

 கைலாசாவில் குடியேற பாஸ்போர்ட்

கைலாசாவில் குடியேற பாஸ்போர்ட்

மேலும் கைலாசாவில் மக்கள் குடியேற பாஸ்போர்ட், கைலாசாவுக்கான தனிக்கொடி, கரன்சி ஆகியவற்றையும் நித்தி அறிமுகப்படுத்தினார். கொரோனா, லாக்டவுன், பொருளாதார நெருக்கடி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என எதை பற்றியும் கவலைப்படாமல் நித்தியானந்தா தனி உலகத்தில் வாழ்ந்து வருவதால் கைலாசாவுக்கு செல்ல இளைஞர்கள் விருப்பமனுக்களை தாக்கல் செய்துவருகிறார்கள்.

 கைலாசாவில் தொழில் தொடங்க

கைலாசாவில் தொழில் தொடங்க

அது போல் கைலாசாவில் தொழில் தொடங்கவும் பலர் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த நிலையில் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை அவர் சூசகமாக ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். அதாவது கைலாசாவில் நித்தியானந்தாவின் அறைக்கு கதவுகளே கிடையாதாம்.

 மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமில்லை

மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமில்லை

மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமே நித்தியானந்தாவுக்கு இல்லையாம். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தனது அறைக்கு வந்து தன்னுடன் எதை பற்றி வேண்டுமானாலும் கலந்துரையாடலாம் என்கிறார். ஊஞ்சலில் படுத்து கொண்டு பனி படர்ந்த மலையையும் கடலையும் ரசிப்பாராம்.

Recommended Video

    அடேய் ராஜசேகரா...! குமுறிய Nithyanandha-வின் அமெரிக்க சீடர் | Oneindia Tamil
     பனிமலையும் கடலும் ஒன்றாக இருக்கும் இடம்

    பனிமலையும் கடலும் ஒன்றாக இருக்கும் இடம்

    எனது வீடியோவை பார்க்கும் மக்கள் பனிமலையும் கடலும் ஒன்றாக எங்கே இருக்கிறது என கூகுளில் தேட ஆரம்பித்திருப்பார்கள் என நித்தியானந்தா கிண்டல் செய்துள்ளார். நிஜமாகவே கைலாசாவில் கடலும் பனிமலையும் இருக்கிறதா என தெரியவில்லை. தன்னை பரமசிவன் என சொல்லிக் கொள்ளும் நித்தியானந்தா, கைலாசா மாலையில் சிவபெருமான் பனிமலை, கடல் இருக்கும் இடத்தில்தான் இருப்பார். இதை எத்தனையோ சினிமாக்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஒரு வேளை இந்த படத்தில் வரும் சீனை மனதில் வைத்துக் கொண்டு பொழுதுபோக்கிற்காக அப்படி சொன்னாரா என தெரியவில்லை. எது எப்படியோ எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... எதுவும் இல்லைன்னாலும் ஆளுறேன் என்ற பாடலுக்கு ஏற்ப தனிக்காட்டு ராஜாவாகவே நித்தி வாழ்ந்து வருகிறார் போங்கள்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+