44 வயசு! ஒரு தலைவனுக்கு வலி தாங்கும் தன்மைதான் வலிமை.. யாரை சொல்கிறார் நித்யானந்தா.. ஏன் என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 10 லட்சம் பேரை கொண்ட சன்யாச படையை உருவாக்குவேன் என நித்தியானந்தா சபதம் ஏற்றுள்ளார்.

Recommended Video

    ஒரு தலைவனுக்கு வலி தாங்கும் தன்மைதான் வலிமை.. யாரை சொல்கிறார் நித்யானந்தா - வீடியோ

    பாலியல் வழக்கு, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய நித்யானந்தா கைது நடவடிக்கையை தவிர்க்க வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அங்கு தனது சீடர்கள், சிஷ்யைகளுடன் கைலாசா எனும் புதிய தீவில் தங்கியுள்ளார்.

    கைலாசாவுக்கு தனி பாஸ்போர்ட், தனி கொடி என நித்யானந்தா அறிமுகப்படுத்திய போதிலும் அந்த தீவு எங்கிருக்கிறது என்பதை மட்டும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதோ ஒரு திரைக்கு முன்பு அமர்ந்தே அவர் சத்சங்கங்களை மேற்கொண்டு வந்தார்.

    கைலாசா

    கைலாசா

    தான் நாட்டை விட்டு வெளியேறி கைலாசா வந்ததை பலர் கிண்டல் செய்தனர். ஆனால் இன்று கொரோனா நோயால் அரசாங்கமே தனிமைப்படுத்திக் கொள்ள சொல்கிறது என கிண்டலாக தெரிவித்திருந்தார். இதற்கு நெட்டிசன்களும் தலைவா நீங்கள் தீர்க்கதரிசி என்றனர். எத்தனை கஷ்டம் வந்தாலும் நித்தி மட்டும் ஜாலியாக இருந்து வந்தார்.

    திரும்பி வந்துட்டேன்

    திரும்பி வந்துட்டேன்

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் நித்யானந்தா நேரலையில் தோன்றவே இல்லை. இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியாகின. அவருக்கு பலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டாத குறையாக சமூகவலைதளங்களில் பதிவுகளை போட்டிருந்தனர். ஆனால் ஒரு நாள் திரும்ப வந்துட்டேனு சொல்லு என கூறி பேஸ்புக்கில் அவர் முகத்தை காட்டாமல் ஒரு பதிவை போட்டிருந்தார்.

     மருத்துவர்கள்

    மருத்துவர்கள்

    தன்னை சுற்றி மருத்துவர்கள் அதிகம் பேர் இருப்பதாகவும் தன்னால் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை, வென்டிலேட்டர், ஆக்ஸிமீட்டர் வைத்திருப்பதாகவும் உருக்கமாக தெரிவித்திருந்தார். மேலும் தான் சமாதி நிலையில் இருப்பதாகவும் கூறி அனைவரையும் குழப்பினார்.

    44 வயது ஆச்சு

    44 வயது ஆச்சு

    இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு 44 வயசு ஆச்சு. நான் சாதிக்காதது எதுவுமில்லை. பல பிரச்சினைகளை சந்திப்பதால் ஷிரத்தன்மை எனக்குள் ஏற்பட்டது. நம்மை பற்றி நமக்கே ஒரு தெளிவு வந்திருக்கிறது. எப்போதும் தலைவனாக இருக்கும் நபருக்கு வலிதாங்கும் தன்மைதான் வலிமை.

    10 லட்சம்

    10 லட்சம்

    10 லட்சம் பேரை திரட்டி சன்யாச படையை உருவாக்குவேன். பரமேஸ்வரன் பாதத்தில் சமர்பித்தே தீருவேன். பரமசிவனின் அருளால் இதை செய்து முடிப்போம் என்று நித்யானந்தா வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+