செம.. இனி டோல்கேட்டில் நிற்கவே வேண்டாம்.. அதுமட்டுமா.. பயணத்தின்போதே சார்ஜ் ஏற்ற எலெக்ட்ரிக் சாலைகள்
டெல்லி: சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் வாகனங்கள் நிற்பதை தவிர்க்க தானியங்கி முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தோ - அமெரிக்க வர்த்தக சபையின் 19 வது பொருளாதார மாநாடு நேற்று நடைபெற்றது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய நிதின் கட்கரி, இந்தியாவில் சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறினார்.

நிதின் கட்கரி பேச்சு
"இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை திட்டங்களில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்திட வேண்டும். சாலை போக்குவரத்தை மின் மயமாக்க விரும்புகிறோம். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய சாலைகளில் மையங்களை அமைக்க வேண்டும்.

மின்சார நெடுஞ்சாலை
இதற்காக காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மத்திய அரசு நாடு முழுவதும் மின்சார நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் கனரக வாகனங்கள் ஓடும்போதே சார்ஜ் செய்துகொள்ளலாம்.

சுங்கச்சாவடிகள்
இதேபோல் சுங்கச் சாவடிகளையும் சூரிய ஒளி சக்தியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலமாக இயக்குவதை அரசு ஊக்குவிக்கிறது. நாட்டின் சாலை போக்குவரத்தை மேம்படுத்த அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

தானியங்கி முறை
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நின்று செல்வதை தவிர்க்க வாகனங்கள் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்ய அதிநவீன கேரமாக்கள் பொறுத்தப்படும். அந்த தொழில்நுட்பத்தின் மூலமாக தானியங்கி முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலமாக ஃபாஸ்ட் டேக் முறையின் தேவை இருக்காது.

போக்குவரத்து நெரிசல்
சுங்கச்சாவடிகளில் மட்டும் சராசரியாக 8 நிமிடங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ஃபாஸ்ட் டேக் வந்தபிறகு இது 47 வினாடிகளாக குறைந்தது. இதை மேலும் குறைப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது. இந்த திட்டம் சாதகமானால் காத்திருப்பு நேரம் குறைவது மட்டுமல்லாமல் போக்குவடத்து நெரிசலும் குறையும்." என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications