"20% எத்தனால் பெட்ரோல்.. நாட்டில் ஒரு கார் கூட பாதிக்கப்படவில்லை!" திட்டவட்டமாக சொன்ன நிதின் கட்கரி
டெல்லி: நாடு முழுக்க இப்போது விற்பனை செய்யப்படும் 20% எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களில் சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும், குறிப்பாக மைலேஜ் குறைவதாகவும் கடந்த சில நாட்களாகவே விமர்சனங்கள் அதிகரித்திருந்தது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். எத்தனால் கலந்த பெட்ரோலால் நாட்டில் எந்தவொரு வாகனத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
நமது நாட்டில் பெட்ரோல் உடன் எத்தனால் கலந்து விற்பனை செய்யும் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. எத்தனால் அளவு மெல்ல அதிகரிக்கப்பட்ட நிலையில், இப்போது அது 20%ஆக உள்ளது. அதன்படி நீங்கள் வாங்கும் பெட்ரோலில் 80% பெட்ரோலும் 20% எத்தனாலும் தான் இருக்கிறது.

20% எத்தனால் கலந்த பெட்ரோல்
அதேநேரம் கடந்த சில காலமாகவே இதைச் சிலர் எதிர்த்து வருகிறார்கள். 20% எத்தனால் கலப்பதால் வண்டிகளில் பாதிப்பு ஏற்படுவதாகவும் மைலேஜ் குறைவதாகவும் அவர்கள் சொல்லி வந்தனர். இதற்கிடையே எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்துப் பயப்படத் தேவையில்லை என்றும் அதனால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கலந்து கொண்ட நிதின் கட்கரி, எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்கு இதுவரை எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் இது தொடர்பான வேண்டுமென்றே நெகடிவ் பிரச்சாரங்கள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
பாதிப்பு இல்லை
நிதின் கட்கரி மேலும் பேசுகையில், "20% எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தியதால், நாட்டில் எந்த ஒரு காருக்காவது பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதா? அப்படி ஒரு உதாரணத்தைச் சொல்லுங்கள்" என்று கேள்வி எழுப்பினார். இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் (SIAM) மற்றும் இந்திய ஆராய்ச்சி சங்கம் (ARAI) ஆகியவை எத்தனால் பயன்பாட்டை ஆதரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
எத்தனால் கலப்பானது நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, பொருளாதார நன்மைகளைக் கொடுப்பதாகவும் இதனால் கார்பன் வெளியேற்றமும் குறைந்து சுற்றுச்சூழலுக்கு உதவுவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார். இது எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அதேநேரம், பருவநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடவும் உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிப்பு
நிதின் கட்கரி மேலும் கூறுகையில், "எத்தனால் உற்பத்தி விவசாயிகளுக்குப் புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. முன்பு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ₹1,200-க்கு விற்கப்பட்டது. இப்போது அது எத்தனால் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால், ஒரு குவிண்டால் ₹2,600 வரை விற்கப்படுகிறது. இது கிராமப்புற விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது.
இந்தத் திட்டத்திற்கு எதிராகச் சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்த விஷயங்கள் அனைத்தும் முறையாகச் சோதிக்கப்பட்ட பிறகே நாங்கள் அறிவிப்புகளை வெளியிடுகிறோம்" என்ற அவர் தெரிவித்தார்.
விளக்கம்
சமீபத்தில் தான் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்து பெட்ரோலிய துறை அமைச்சகமும் விளக்கமளித்திருந்தது. எத்தனால் கலந்த பெட்ரோலால் வண்டிகளில் பாதிப்பு ஏற்படும் என்பது ஆதாரமற்றவை மற்றும் அறிவியல் பூர்வமான சான்றுகள் அல்லது நிபுணர் ஆய்வுகளால் ஆதரிக்கப்படவில்லை என்று கூறப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் தான் நிதின் கட்கரியும் கூட அது பாதுகாப்பானது என்று உறுதியளித்துள்ளார்.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஏலே பேதில போவ.. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398! இலங்கை மேல் விழுந்த இடி.. அடியை தாங்குவாரா அனுரகுமார! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications