அயோத்தி வழக்கின் அரசியல் சாசன அமர்வு விசாரணை ரத்து… காரணம் நீதிபதி இல்லை
டெல்லி:அயோத்தி நில விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது வரும் 29ம் தேதி நடைபெறுவதாக இருந்த அரசியல் சாசன அமர்வு விசாரணையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களை விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி. ரமணா, டி.ஒய். சந்திராசூட், யு.யு. லலித் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
மனுக்களை இந்த அமர்வு ஜனவரி 10-ஆம் தேதி விசாரிக்கும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அயோத்தி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை இந்த மாதம்10ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ள இருந்தது.

முஸ்லிம் சமூகம் மனு
ஆனால், அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம் சமூக மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவன் என்பவர், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக முதல்வர் கல்யாண் சிங் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக யு.யு. லலித் வாதாடியுள்ளார். அவர்தான் தற்போது 5 நீதிபதி கொண்ட அமர்வில் நீதிபதியாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.

விலகிய லலித்
அதன் எதிரொலியாக, அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி யு.யு. லலித் அறிவித்தார். இதையடுத்து, புதிய அமர்வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமைத்தார். அதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோர் இடம்பெற்றனர்.

ஜன.29ல் விசாரணை
முந்தைய அமர்வில் இருந்த நீதிபதி லலித் இடம் பெறவில்லை, மேலும், என்.வி. ரமணாவும் புதிய அமர்வில் இடம் பெறவில்லை. அதே சமயத்தில் வழக்கு விசாரணை வரும் 29ம் தேதி புதிய அமர்வில் நடைபெறும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.

வெளியானது சுற்றறிக்கை
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:வரும் 29-ம் தேதி அயோத்தி நிலவிவகார மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அன்று வரஇயலாத நிலையில் உள்ளார்.

ரத்தான விசாரணை
எனவே அன்று நடைபெறும் விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் புதிய தேதியில் எப்போது விசாரணை நடைபெறும் என்பது குறித்து அறிவிக்கப் படவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications