"ஷ்ஷ்".. ராணுவ ரகசியம்.. விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கேள்வி கேட்டதுமே.. பறந்து வந்த பதில் இதான்
விழுப்புரம் எம்பி ரவிக்குமாருக்கு மத்திய பாதுகாப்பு துறை பதிலளித்துள்ளது
டெல்லி: சீன ராணுவம் நம்முடைய எல்லைக்குள் குவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.. ஆனால், ரவிக்குமாருக்கு, மத்திய அரசு தந்த பதிலை பாருங்க.
நாளுக்கு நாள் சீனா எல்லை பிரச்சனை அதிகமாகி கொண்டே போகிறது.. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இதுவரை ஒரு சுமூக எட்டப்படவில்லை. எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் சீனா உடன்பட மறுப்பு சொல்லி வருகிறது.
இதுஒருபுறம் என்றால், சர்ச்சைக்குரிய பகுதிகளில் சாலைகள் அமைத்தல், ராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், பாலங்கள் அமைத்தல் இப்படி பல அத்துமீறல்களையும் சீனா செய்து வருவதாக கூறப்படுகிறது.

டோக்லாமில் ஜம்பேரி மேடு வரையிலான சீன படைகளின் குவிப்பு, நம் நாட்டின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது.. வடகிழக்கு மாநிலங்களுக்கான நுழைவாயிலாக சிலிகுரி வழித்தடத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் உள்ளது... தேசிய பாதுகாப்பு என்னாகுமோ என்ற கவலையும் இது தொடர்பாக எழுந்து வருகிறது. இந்த எல்லை பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட வேண்டும், சீனாவின் ஊடுருவல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தல்கள் தொடர்ந்து வந்தன.. ஆனால், இதுவரை விவாதம் எதுவுமே இதுகுறித்து நடத்தப்படாமலேயே உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதில், எல்லையை காக்க நம்முடைய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று கேட்டார்.. ரவிக்குமாரின் கேள்விக்கு, மத்தியஅரசின் பாதுகாப்பு அமைச்சகம் எழுத்துபூர்வமான பதில் சொல்லி உள்ளது.. அந்த பதிலில், இந்த இந்தத் தகவல் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.. அதனால், இது ராணுவ ரகசியம் ஆகும்" என்று தெரிவித்துள்ளது.
இதை பற்றி ரவிக்குமார் சொல்லும்போது, "சீன ராணுவம் நம்முடைய நாட்டுக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.. மேலும் பல்லாயிரக்கணக்கான துருப்புகளையும் நிலைநிறுத்தி வைத்திருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.. அதுகுறித்த உண்மை நிலையை ஒன்றிய அரசு தெரிவிக்க மறுப்பதை பார்த்தால், அந்த செய்திகளை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications