இருமல் சிரப் இனி குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.. மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுரை
டெல்லி: மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப்பை குடித்த 11 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 2 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இருமல் சிரப்பை வழங்க கூடாது என்று மத்திய அரசு சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 2 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இருமல் சிரப் வழங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்த 11 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் இருமல் சிரப் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. இருமல் சிரப்பில் உடலுக்கு தேவையற்ற கெமிக்கல் கலக்கப்பட்டு இருந்தது தான் குழந்தைகள் இறப்புக்கு முக்கிய காரணம் என்ற தகவல் பரவ தொடங்கியது.

இந்நிலையில் தான் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளது. மத்திய அரசின் சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம் (Directorate General of Health Services or DGHS) சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் வழங்க கூடாது. பொதுவாக 5 மற்றும் அதற்கு உட்பட்ட வயதினருக்கு இருமல், சளி சிரப் பரிந்துரைக்கப்படுவது இல்லை. இதனால் இருமல் சிரப் விவகாரத்தில் மருத்துவர்களின் பரிந்துரைகளை பின்பற்றுவது பற்றி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது கடந்த 2 வாரத்தில் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 9 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் பலியாகின. அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்திலும் கடந்த சில நாட்களில் 2 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் பலியாகின. இந்த 2 மாநிலங்களும் அண்டை மாநிலங்களாக உள்ளன. இதில் பெரும்பாலான குழந்தைகள் இருமல் சிரப் குடித்தவர்கள். 5 குழந்தைகள் Coldref, ஒரு குழந்தை Nextro சிரப்பை பயன்படுத்தி உள்ளது. இதனால் அவர்களின் உயிரிழப்புக்கு இருமல் சிரப் தான் முக்கிய காரணம் என்ற தகவல் பரவியது.
இதனால் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் ஹைட்ரோபுரோமைடு சிரப் தொகுதிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருமல் சிரப்புகள் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அல்லது எத்திலீன் கிளைக்கால் (EG) உள்ளிட்டவை இல்லை என்பதை சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக சளி, காய்ச்சல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட 1,420 குழந்தைகளின் வரிசைப் பட்டியல் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இப்படியான சூழலில் தான் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப்புகள் வழங்கவே கூடாது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பொதுவாகவே சிரப்புகள் பரிந்துரை செய்யப்படுவது இல்லை. இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications