லாக்டவுன் காலத்தில் மரணம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் இல்லை: மத்திய அரசு
டெல்லி: லாக்டவுன் காலத்தில் மரணம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் இல்லை என லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25 முதல் 68 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. பின்னர் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

புலம்பெயர் தொழிலாளர்கள் அவலம்
லாக்டவுன் காலத்தில் பல்வேறு மாநிலங்களில் சிக்கிய பிற மாநிலத் தொழிலாளர்கள் பெரும்துயரை சந்தித்தனர். பிழைக்க வந்த இடத்தில் வருவாய்க்கு வழி இல்லாமல், தங்க இடம் இல்லாமல் சொந்த மாநிலத்துக்கும் செல்ல முடியாமல் பல லட்சக்கணக்கான பிற மாநிலத்தவர் தவித்தனர்.

செத்து மடிந்த தொழிலாளர்கள்
ஒருகட்டத்தில் பிற மாநிலத்தவர் சொந்த ஊர்களுக்கு நடைபயணமாகவே சென்றனர். பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொந்த மாநிலங்களுக்கு பல வாரங்களாக நடந்தே சென்ற பேரவலங்களும் நிகழ்ந்தன. இப்படியாக சென்றவர்கள் விபத்துகளில் சிக்கியும் பசியில் செத்தும் மடிந்த சம்பவம் தேசத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

புலம்பெயர் தொழிலாளர் மரணம்- கேள்வி
இதன்பின்னரே புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது தொடர்பாக இன்று லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர்? உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மத்திய அரசு என்ன உதவிகளை வழங்கியிருக்கிறது என்று லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது.

மத்திய அரசிடம் தகவல்கள் இல்லை
இதற்கு மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது, கொரோனா லாக்டவுன் காலத்தில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் இல்லை. ஆகையால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நட்ட ஈடு எவ்வளவு தரப்பட்டது என்ற கேள்வியே எழவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications