எல்லை மோதல்: இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்யும் திட்டம் இல்லை- அமெரிக்கா திட்டவட்டம்
டெல்லி: இந்தியா மற்றும் சீனா இடையேயான மோதல் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தத்துக்கு அமெரிக்கா தயார் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 முறை தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய அரசு இதனை திட்ட வட்டமாக நிராகரித்துவிட்டது.

இந்தியா- பாகிஸ்தான் பிரச்சனையில் 3-வது நாட்டின் தலையீட்டை அனுமதிப்பது இல்லை என்பது இந்தியாவின் கொள்கை. இந்த நிலையில் லடாக்கின் கிழக்கில் அத்துமீறி சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
சீனா தரப்பில் 43 பேர் பலியாகினர். 1975-ம் ஆண்டு இந்தியா- சீனா யுத்தத்துக்குப் பின்னர் இருநாடுகளிடையே நிகழ்ந்த மிகப் பெரும் மோதல். ஆகையால் உலக நாடுகள் இந்த மோதல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் மெக்கெனானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா -சீனா மோதல் தொடர்பான கேள்விக்கு மெக்கெனானி அளித்த பதில்:
இந்தியா-சீனா மோதல் நிலைமை, உயிரிழப்புகள் குறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் நன்கு அறிவார். இந்த நிலைமைகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. உயிரிழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொள்கிறோம்.
Recommended Video
கடந்த ஜூன் 2-ந் தேதியன்று இந்திய பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப், தொலைபேசியில் உரையாடினார். அப்போது சீனாவுடனான எல்லை பிரச்சனை குறித்தும் விவாதிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியா-சீனா இடையே மத்தியஸ்தம் செய்யும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை . இவ்வாறு மெக்கெனானி கூறினார்.
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications