சோனியா காந்தி தலைமையை மாற்ற வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை- குலாம் நபி ஆசாத் திடீர் பல்டி!
டெல்லி: சட்டசபை தேர்தல்கள் தோல்விக்காக சோனியா காந்தி பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிருப்தியாளர்கள் குழுவின் தலைவர் குலாம்நபி ஆசாத் திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார்.
உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இந்த தேர்தல் தோல்விகளுக்கு சோனியா காந்தி குடும்பம்தான் காரணம் என விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கூடி விவாதித்தது. இந்த கூட்டத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா மூவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். ஆனால் செயற்குழு உறுப்பினர்கள் இதனை ஏற்கவில்லை. இதனால் சோனியா காந்தியே இடைக்கால தலைவராக இருந்து வருகிறார்.

கபில் சிபலுக்கு எதிர்ப்பு
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமைப் பதவியை சோனியா காந்தி விட்டுத்தர வேண்டும் என்றார் அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல். இதற்கு மற்றொரு மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காங்கிர அதிருப்தி தலைவர்கள் டெல்லியில் மூன்று முறை கூடி ஆலோசனை நடத்தினர்.

சோனியாவுடன் சந்திப்பு
இதனிடையே காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை இன்று குலாம்நபி ஆசாத் திடீரென சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இது வழக்கமான ஒரு சந்திப்புதான். உங்களுக்குதான் இது செய்தியாக தெரிகிறது. நாங்கள் எப்போதும் போல சந்தித்து ஆலோசனை நடத்தினோம்.

பதவி விலகத் தேவை இல்லை
இந்த ஆலோசனையின் போது எதிர்வரும் தேர்தல்களை எப்படி ஒற்றுமையாக எதிர்கொள்வது என விவாதித்தோம். காங்கிரஸ் தலைமை பதவியில் மாற்றம் தேவை என்கிற பேச்சே எழவில்லை. சோனியா காந்தியை தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என செயற்குழுவில் யாரும் வலியுறுத்தவும் இல்லை. இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.

ஹூடா-ராகுல் சந்திப்பு
முன்னதாக மற்றொரு அதிருப்தி தலைவர் பூபிந்தர்சிங் ஹூடா, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது அதிருப்தி தலைவர்கள் யாரும் கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றார். பின்னர் குலாம் நபி ஆசாத்தை ஹூடா சந்தித்து விவாதித்தார். மேலும் குலாம்நபி ஆசாத்தை நேரில் சந்திப்பதற்கு முன்னர் சோனியா காந்தியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உட்கட்சி பிரச்சனை குறித்து விவாதித்திருந்தார்.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications