Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடாளுமன்றத்தில் ஜெய்ஹிந்த் - வந்தே மாதரம் கூற தடை.. எம்பிக்களுக்கு முக்கிய அட்வைஸ்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் தான் சபாநாயகர் உத்தரவை நாடாளுமன்றத்துக்கு உள்ளே அல்லது வெளியே நேரடியாகவோ, மறைமுகமாகவோ விமர்சிக்க கூடாது. வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் கோஷங்களை எழுப்பக்கூடாது என எம்பிக்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கி நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

parliament session vande mataram

இதற்கான பட்ஜெட் உரை தயாரிக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. மோடி 3வது முறையாக பிரதமராகி உள்ள நிலையில் முதல் பட்ஜெட் இதுவாகும். இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாளை தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பது ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. நாளை மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதன் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு கோரி டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது நாளை தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நாடாளுமன்றத்தின் ராஜ்யசபா செயலகம் சார்பில் எம்பிக்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது நாடாளுமன்ற ராஜ்யசபா எம்பிக்களுக்கான ஹேண்ட் புக்கில் இருந்து சில முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு இந்த அறிவுரை என்பது வழங்கப்பட்டுள்ளது.

அதில் நாடாளுமன்றத்துக்குள் அல்லது நாடாளுமன்றத்துக்கு வெளியே சபாநாயகர் உத்தரவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ விமர்சிக்க கூடாது. நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு அனைத்து எம்பிக்களும் வணக்கம் தெரிவிக்க வேண்டும். நாடாளுமன்றத்துக்குள் அல்லது நாடாளுமன்ற வளாகத்துக்குள் எம்பிக்கள் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என்ற வார்த்தைகளை பயன்படுத்த கூடாது. மேலும் குறிப்பிட்ட நபரின் பெயரை கூறி நன்றி நன்றி என்பது உள்ளிட்ட முழங்கங்களை சபையில் எழுப்பபக்கூடாது. அதோடு சபை மாண்பை குறைக்கும் வகையிலான வார்த்தை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக சபை மாண்பை மற்றும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகளை சொன்னால் உடனடியாக அதனை பேசியவர்களை வாபஸ் பெற வேண்டும். அதுமட்டுமின்றி குறிப்பிட்ட உறுப்பினர்கள் ஒருவரை விமர்சித்து பேசி கேள்வி எழுப்பும்போது சம்பந்தப்பட்ட அந்த நபர் பதிலளிக்கும்போது கேள்வி எழுப்பியவர் சபையில் இருக்க வேண்டும். அப்படி சபையில் இல்லாமல் போவது என்பது நாடாளுமன்ற நெறிமுறைகளை மீறுவதாகும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த முதல் முதல் முறையாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பது நடந்தது. இந்த கூட்டத்தொடரில் நீட் விலக்கு, நீட் முறைகேடு, மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க கூறினர். பிரதமர் மோடி மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சமயத்தில் ராஜ்யசபா, லோக்சபாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சிகளுடன் கருத்து மோதலில் ஏற்பட்டன.

இந்த வேளையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் மீதும் நேரடியாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில் தான் தற்போது ராஜ்யசபா செயலகம் சார்பில் எம்பிக்களுக்கு சில முக்கிய அட்வைஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+