எல்லையில் போரும் இல்லை அமைதியும் இல்லை... விமானப்படை தளபதி பதவ்ரியா!!
டெல்லி: எல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற சூழல் நிலவுகிறது என்று விமானப்படை தலைமை தளபதி ஆர்கேஎஸ் பதவ்ரியா இன்று தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்கேஎஸ் பதவ்ரியா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''எல்லையில் நடக்கும் எதிர்விளைவுகளுக்கு விரைந்து பதில் அளிக்க இந்திய விமானப்படை தயாராகி வருகிறது. எல்லையில் எந்த வகையில் எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.

தற்போது எல்லையின் வடக்குப் பகுதியில் போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற சூழல்தான் உள்ளது. எந்த ஒரு சூழலையும் நமது படை எதிர்கொள்ளும் என்பது உங்களுக்கும் தெரியும்.
எல்லையில் எந்த நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் ஏற்கனவே படையில் சேர்க்கப்பட்டு இருக்கும் சி-17 குளோப்மாஸ்டர், சினூக், அப்பாச்சி ஆகிய போர் விமானங்களுடன் ரபேல் விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எந்தவித தந்திரமான நிலையும் சமாளிக்க முடியும்.
எந்தவொரு எதிர்கால மோதலிலும் நமது வெற்றிக்கு விமானப் படை ஒரு முக்கிய உதவியாக இருக்கும். இதனால், அனைத்து தொழில்நுட்பங்களுடன் இந்தப் படை மேம்படுத்தப்பட்டுள்ளது. லேசான போர் விமானமான தேஜாஸின் இரண்டு படைப்பிரிவுகளை அதிகரித்தது மற்றும் சு -30 எம்.கே.ஐ போர் ஜெட் விமானங்களில் சில உள்நாட்டு ஆயுதங்களை மிகக் குறைந்த கால இடைவெளியில் ஒருங்கிணைத்தது ஆகியவை மிகவும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சியாக அமைந்துள்ளன. இது நம் நாட்டின் திறன்களை பிரதிபலிப்பதாக உள்ளன.
மேலும் அமெரிக்காவிடம் இருந்து ரூ. 2,700 கோடி அளவிற்கு ஆயுதங்கள், துப்பாக்கிகள் வாங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
இந்திய சீனா எல்லையில் இருநாடுகளின் சார்பிலும் சுமார் 50,000 படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இத்துடன் ஆயுதங்களும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தரப்பில் இருந்து வெளியான செய்தியில் தெரிய வந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications