எல்லையில் போரும் இல்லை அமைதியும் இல்லை... விமானப்படை தளபதி பதவ்ரியா!!
டெல்லி: எல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற சூழல் நிலவுகிறது என்று விமானப்படை தலைமை தளபதி ஆர்கேஎஸ் பதவ்ரியா இன்று தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்கேஎஸ் பதவ்ரியா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''எல்லையில் நடக்கும் எதிர்விளைவுகளுக்கு விரைந்து பதில் அளிக்க இந்திய விமானப்படை தயாராகி வருகிறது. எல்லையில் எந்த வகையில் எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.

தற்போது எல்லையின் வடக்குப் பகுதியில் போரும் இல்லை, அமைதியும் இல்லை என்ற சூழல்தான் உள்ளது. எந்த ஒரு சூழலையும் நமது படை எதிர்கொள்ளும் என்பது உங்களுக்கும் தெரியும்.
எல்லையில் எந்த நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் ஏற்கனவே படையில் சேர்க்கப்பட்டு இருக்கும் சி-17 குளோப்மாஸ்டர், சினூக், அப்பாச்சி ஆகிய போர் விமானங்களுடன் ரபேல் விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எந்தவித தந்திரமான நிலையும் சமாளிக்க முடியும்.
எந்தவொரு எதிர்கால மோதலிலும் நமது வெற்றிக்கு விமானப் படை ஒரு முக்கிய உதவியாக இருக்கும். இதனால், அனைத்து தொழில்நுட்பங்களுடன் இந்தப் படை மேம்படுத்தப்பட்டுள்ளது. லேசான போர் விமானமான தேஜாஸின் இரண்டு படைப்பிரிவுகளை அதிகரித்தது மற்றும் சு -30 எம்.கே.ஐ போர் ஜெட் விமானங்களில் சில உள்நாட்டு ஆயுதங்களை மிகக் குறைந்த கால இடைவெளியில் ஒருங்கிணைத்தது ஆகியவை மிகவும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சியாக அமைந்துள்ளன. இது நம் நாட்டின் திறன்களை பிரதிபலிப்பதாக உள்ளன.
மேலும் அமெரிக்காவிடம் இருந்து ரூ. 2,700 கோடி அளவிற்கு ஆயுதங்கள், துப்பாக்கிகள் வாங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.
இந்திய சீனா எல்லையில் இருநாடுகளின் சார்பிலும் சுமார் 50,000 படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இத்துடன் ஆயுதங்களும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தரப்பில் இருந்து வெளியான செய்தியில் தெரிய வந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications