தமிழ்நாட்டில் அடுத்த 2 நாளைக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ளது. இதனால், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் குமரி கடல் பகுதிக்கும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தென் தமிழகத்தில் 48 மணி நேரத்திற்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பகுதியால் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்தது. சென்னையில் அவ்வப்போது மழை பெய்தன.
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய பகுதியான இந்தியப் பெருங்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், வடகிழக்கு பருவ மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், மேலும் 9-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications