குடிமக்களின் தேசிய பதிவேடு.. எதிர்காலத்திற்கான ஆவணம்.. என்ஆர்சி பற்றி தலைமை நீதிபதி கருத்து!
குடிமக்களின் தேசிய பதிவேட்டு(National Register of Citizens) என்பது எதிர்காலத்திற்கான ஆவணம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
டெல்லி: குடிமக்களின் தேசிய பதிவேட்டு(National Register of Citizens) என்பது எதிர்காலத்திற்கான ஆவணம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
1968ல் வங்கதேசம் உருவாகும் முன் அங்கு இருந்த கிழக்கு பாகிஸ்தானில் திடீர் மதக்கலவரம் ஏற்பட்டது. இதனால் அப்போது அங்கிருந்து சாரைசாரையாக மக்கள் இந்தியாவில் குடியேறினார்கள். இந்தியாவிற்கு வந்த அவர்கள் அகதிகளாக தங்களை பதிவு செய்து கொண்டனர்.
இந்த நிலையில் வங்கதேசத்தில் இருந்து அசாமில் முறைகேடாக குடியேறிய மக்களை வெளியேற்ற மத்திய பாஜக அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக அசாம் அரசுடன் சேர்ந்து மத்திய அரசு குடிமக்களின் தேசிய பதிவேட்டை வெளியிட்டது.

லிஸ்ட்
இதன்படி 1971க்கு பின் இந்தியாவில் வங்கதேசத்தில் இருந்து முறையின்றி குடியேறிவர்கள் வெளியேற்றப்படுவார்கள். கடைசியாக வெளியான குடிமக்களின் தேசிய பதிவேட்டில் 33 மில்லியன் விண்ணப்பங்களில் 1.9 மில்லியன் மக்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை . இவர்களின் பெயர் மறுபரிசீலனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
இதை உச்ச நீதிமன்றம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இது குறித்து தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேட்டி அளித்துள்ளார். அதில், குடிமக்களின் தேசிய பதிவேடு வெறும் பட்டியல் கிடையாது. அது ஒரு ஆவணம். 19 லட்சம் அல்லது 40 லட்சம் என்பது பொருட்டல்ல. இது எதிர்காலத்திற்கான ஆவணம். நம்முடைய எதிர்காலம் இதை நம்பி இருக்கிறது.

என்ன மதிப்பு
குடிமக்களின் தேசிய பதிவேடு என்பது என்னை பொறுத்தவரை அமைதியாக ஒருங்கிணைந்து வாழ்வதற்கான அர்த்தம் என்று சொல்வேன். முன்னேறிய சமுதாயம் என்பது எல்லோரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதற்கு எதிராக சிலர் சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள்.

கைகளை முறுக்கினார்கள்
இந்த பட்டியலுக்கு எதிராக பலர் சமூக வலைதங்களில் கைகளை முறுக்கி, எதிராக இரட்டை மனநிலையுடன் பேசினார்கள். ஆனால் அப்படிப்பட்ட கருத்துக்கள் எல்லாம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டுள்ளார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்னும் 2 வாரங்களில் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications