"மதத்தின் பெயரால் நாட்டை சீர்குலைக்க சிலர் முயல்கின்றனர்!"தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பரபர
டெல்லி: நாட்டை சிலர் சீர்குலைக்க முயல்வதாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறி உள்ளக் கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக உள்ளவர் அஜித் தோவல். இவர் இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது நாட்டின் இறையாண்மை குலைக்கச் சிலர் முயல்வதாகக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் தோவல்
தலைநகர் டெல்லியில் அகில இந்திய சூஃபி சஜ்ஜதனாஷின் கவுன்சில் சார்பில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அங்குப் பேசிய அஜித் தோவல், சிலர் மதத்தின் பெயரால் நாட்டை சீர்குலைக்க முயல்வதாகப் பரபர கருத்தைத் தெரிவித்து உள்ளார்.

டெல்லி கூட்டம்
சஜ்ஜதனாஷின் கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமையை நிலைநாட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். இந்தக் கூட்டத்தில் அஜித் தோவல் பேசும் போது தான், இந்த கருத்துகளை அவர் குறிப்பிட்டார்.

சீர்குலைக்க முயற்சி
டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அஜித் தோவல், "இந்தியாவின் வளர்ச்சியைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக மோசமான ஒரு சூழலை உருவாக்க சில தீய சக்திகள் முயல்கின்றன. இந்தத் தீய சக்திகள் மதம் மற்றும் சித்தாந்தத்தின் பெயரால் நாட்டை சீர்குலைக்கவும் இங்கு மோதலை ஏற்படுத்தவும் முயல்கின்றனர். இது ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கிறது. இது நாட்டிற்கு வெளியேயும் கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.

நபிகள் நாயகம்
சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கு வெளிநாடுகளில் இருந்தும் கடும் கண்டனம் வந்து இருந்தது. அப்போதே மத்திய அரசு இது போன்ற கருத்துக்களைப் பொறுத்துக்கொள்ளாது என்று கூறி இருந்தது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் டெய்லர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அங்குப் பதற்றமான நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில் தான், அஜித் தோவல் இந்த முக்கிய கருத்தைக் கூறி உள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications