சி.பி.ஐ. பிடியில் சிக்கிய சித்ரா ராமகிருஷ்ணன்...அவிழ்க்கப்படுமா இமயமலை சாமியார் யார்? என்கிற மர்மம்?
டெல்லி: தேசிய பங்கு சந்தையான என்.எஸ்.இ யின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் மீதான ஏராளமான முறைகேடு புகார்களால் சி.பி.ஐ.அவரை நேற்று கைது செய்தது. இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணன் இடைவிடாமல் கூறிவரும் இமயமலை சாமியார் யார் என்பது குறித்த மர்மமும் அவிழக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்.எஸ்.இ. சித்ரா மீது நீண்டகாலமாகவே பல்வேறு ஊழல் முறைகேடுகள் கூறப்பட்டன. இது தொடர்பாக பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி விசாரணை நடத்தி அபராதங்கள், தடைகளை சித்ராவுக்கு விதித்தன.
இந்த விசாரணைகளின் போது என்.எஸ்.இ. தொடர்பான ஒவ்வொரு நகர்வுகள், நடவடிக்கைகளை மர்ம சாமியார் ஒருவருக்கு சித்ரா ராமகிருஷ்ணன் அனுப்பி வைத்திருந்தது அம்பலமானது. மேலும் அந்த சாமியார்தான் நாட்டின் தேசிய பங்கு சந்தையையே தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது எனவும் தெரியவந்தது. ஆனால் அந்த சாமியார் குறித்த விவரங்களை சித்ரா ராமகிருஷ்ணன் தெரிவிக்கவில்லை. அவர் இமயமலை சார்ந்தவர் என்று மட்டும் சித்ரா கூறி வந்தார்.

அதிரடி நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து சித்ரா மீதான வழக்கு அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தது. சித்ரா ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. சிபிஐ, அமலாக்கப் பிரிவுகள் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முடுக்கிவிட்டன. சித்ரா வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது.

யார் அந்த சாமியார்?
மேலும் சித்ரா ராமகிருஷ்ணனை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைகளின் போதும் சித்ராவிடம் இருந்து மழுப்பலான மூடி மறைக்கப்பட்ட தகவல்கள் பெற முடிந்தது. மேலும் சித்ராவால் என்.ஐ.இ-க்குள் கொண்டுவரப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியன் தான் மர்ம சாமியாரா? என்கிற சந்தேகத்தையும் சிபிஐ அதிகாரிகள் முன்வைத்திருந்தனர்.

ஹர்ஷத் மேத்தாக்கள்
அத்துடன் என்.எஸ்.இ தொடர்பான பல்வேறு தகவல்களை சில நிறுவனங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு சித்ரா ராமகிருஷ்ணன் முறைகேடுகளில் ஈடுபட்டு பெரும் பணம் பெற்றிருப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்தனர். நாட்டில் பங்கு சந்தைகளையே அலறவிட்ட ஹர்ஷத் மேத்தாக்களை விஞ்சிடும் வகையில் சித்ரா ராமகிருஷ்ணனின் மோசடிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மர்மங்கள் விலகும்?
இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணனை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக நேற்று இரவு கைது செய்தனர். இப்போது சிபிஐ கஸ்டடியில் இருக்கும் சித்ரா ராமகிருஷ்ணன், சர்ச்சைக்குரிய இமயமலை மர்ம சாமியார் குறித்த தகவல்களை இனியேனும் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடும் என்கின்றன சிபிஐ வட்டாரங்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications