உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்பு.. யார் இவர்? காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 48-வது புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் நேற்று ஓய்வு பெற்றார்.
இவரை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்து வந்த என்.வி.ரமணா புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

என்.வி.ரமணா பதவியேற்பு
அதன்படி 48-வது உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பதவியேற்றுக் கொண்டார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் எளிமையாக நடந்த பதவியேற்பு விழாவில் என்.வி.ரமணாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்பட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். என்.வி.ரமணா அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி வரை பதவியில் இருப்பார்

விவசாய குடும்பம்
தலைமை நீதிபதியாக பதவியேற்ற என்.வி.ரமணா 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி பிறந்தார். இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் பொன்னாவரம் எனும் கிராமம் ஆகும். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் 1983-ம் ஆண்டு வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டார். ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 2000-ம் ஆண்டில் மூத்த நீதிபதியாக பணிபுரிந்த என்.வி.ரமணா, அதன் பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக என்.வி.ரமணா நியமிக்கப்பட்டார்.

நாட்டில் பிரச்சினை
தற்போதைய சூழ்நிலையில் என்.வி.ரமணாவின் பதவியேற்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நாட்டில் கொரோனா தொற்று யாருக்கும் கட்டுப்படாமல் அதிகளவு உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை என நாட்டில் எங்கு திரும்பினாலும் பிரச்சினையாக உள்ளது.

காத்திருக்கும் சவால்கள்
கொரோனா தடுப்பூசிகள், அத்தியாவசிய மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் தொடர்பாக ஏறக்குறைய பல மாநிலங்களின் உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று நேற்று ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அறிவித்தார். ஆகவே முக்கியமான நிலையில் இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்து நல்ல முறையில் தீர்வு காண வேண்டிய பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் என்.வி.ரமணாவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications