இந்தியாவில் 422 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு- மகாராஷ்டிராவில் 108 கேஸ்கள் பதிவு
டெல்லி: இந்தியாவில் 17 மாநிலங்களில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 108 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 6,987 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாளை ஒப்பிடுகையில் இது 2.9% குறைவு. இதையடுத்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,47,86,802 ஆக உயர்ந்துள்ளது.
பிரதமர் மோடி அறிவித்த 15 to 18 வயது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி! என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?
கேரளாவில் அதிகம்
கேரளாவில்தான் அதிகபட்சமாக 2,407 பேருக்கு கொரோனா பாதிப்பு புதியதாக கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 1485; தமிழகத்தில் 606; மேற்கு வங்கத்தில் 552, கர்நாடகாவில் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த 5 மாநிலங்களில் நாட்டின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 76.13%. கேரளா மாநிலத்தில் மட்டும் 34.45% புதிய கேஸ்கள் பதிவாகி உள்ளன.
கொரோனா மரணங்கள்
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 162 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மொத்த கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 4,79,682. கேரளாவில்தான் மிக அதிகபட்சமாக 115 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 7,091 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நாட்டில் இதுவரை 3,42,30,354 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
422 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு
இந்தியாவில் 17 மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில்தான் மிக அதிகபட்சமாக 108 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்ததாக டெல்லியில் 79 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 3-வது இடத்தில் குஜராத் மாநிலத்தில் 43 பேருக்கும் தெலுங்கானாவில் 41 பேருக்கும் கேரளாவில் 38 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34.
Recommended Video
மாநிலங்களில் பாதிப்பு விவரம்
பிற மாநிலங்களின் ஓமிக்ரான் பாதிப்பு விவரம்: கர்நாடகா 31; ராஜஸ்தான் 22; மேற்கு வங்கம்- 6; ஹரியானா-4; ஒடிஷா-4; ஆந்திரா-4; ஜம்மு காஷ்மீர்-3; உத்தரப்பிரதேசம்-2; சண்டிகர்-1; லடாக்-1 உத்தரகாண்ட்-1. ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 130 பேர் குணமடைந்துள்ளனர்.