டெல்லி வன்முறை.. முக்கிய குற்றவாளிக்கு இந்த கட்சி உடன் தொடர்பா? அடித்துக் கொள்ளும் ஆம் ஆத்மி & பாஜக
டெல்லி: அனுமன் ஜெயந்தி வன்முறையில் மூளையாகச் செயல்பட்டவர் எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்பதே விவாதம் ஆகி உள்ளது.
Recommended Video
தலைநகர் டெல்லியில் சமீபத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. ஜஹாங்கிர் பூரி பகுதியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் வன்முறை ஏற்பட்டது.
அப்போது அங்கு திடீரென இரு தரப்பிற்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இந்த திடீர் வன்முறையில் பலரும் காயமடைந்தனர்.

அங்குள்ள வாகனங்களும் கூட அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், நிலைமையைச் சமாளிக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், போலீசார் மீதும் கூட சிலர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மொத்தம் மூன்று ஊர்வலங்கள் நடத்தப்பட்ட நிலையில், கடைசி ஊர்வலத்தில் தான் இந்த வன்முறை நடந்துள்ளது. போலீசாரிடம் இருந்து இந்த ஊர்வலத்திற்கு எவ்வித அனுமதியும் வாங்கப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வன்முறையில் முக்கிய குற்றவாளியாக அன்சார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதில் பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் அன்சார் எதிர்த்தரப்பைச் சேர்ந்தவர் என்று மாறி மாறி சாடி வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சிக்கும் அவருக்குத் தொடர்பு இருப்பதாக பாஜகவின் மனோஜ் திவாரி குற்றம் சாட்டி இருந்தார். இதனிடையே இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆம் ஆத்மி தலைவர் அதிஷி இன்று "அன்சார் ஒரு பாஜக தலைவர்" என்று ட்வீட் செய்துள்ளார். அன்சார் பாஜக தலைவர்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும் ஆம் ஆத்மி வெளியிட்டது.












Click it and Unblock the Notifications