"ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு"... ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத் திடீர் சீர்திருத்த முழக்கம்!
டெல்லி: இந்து சமூக மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் சமமான மரியாதையை பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்; இந்துக்களைப் பொறுத்தவரையில் ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு என்பதை ஏற்று செயல்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: இந்து சமூகத்தில் ஜாதிய மோதல்கள், பிளவுகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.இந்து சமூக மக்கள் சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

இந்து சமூக மக்கள், ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு என பிரிவினையற்ற நல்லிணக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். நமது சமூக அமைப்பில் தலைகீழான மாற்றங்களை உருவாக்க நினைத்தால் அடிப்படையில் 5 மாற்றங்களை செய்தாக வேண்டும். குடும்ப மேலாண்மை, சமூக நல்லிணக்கம், சூழல் பாதுகாப்பு, சுய விழிப்புணர்வு, சமூக கடமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கமாது தமது 100-வது ஆண்டு விழாவில் இத்தகைய மாற்றங்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொண்டர்கள் அனைத்து சமூகத்தினரின் வீடுகளுக்கு செல்ல வேண்டும்; அனைத்து மக்களுடனும் உரையாட வேண்டும். நாம் நமக்குள் இருக்கும் பிரிவினைகளை முடிவுக்கு கொண்டுவர உழைக்க வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மக்களை ஜாதிய அடிப்படையில், மத அடிப்படையில் பிரிக்கக் கூடியது; ஜாதிய வர்ண பேதத்தை வலியுறுத்தும் சனாதன தர்மத்தைத் தூக்கி பிடிக்கக் கூடியது என்கிற விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. ஆனால் தற்போது அனைத்து ஜாதி மோதல்களையும் முடிவுக்குக் கொண்டு வந்து ஒரே கோவில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு என்ற முழக்கத்தை முன்னெடுப்போம் என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது புதிய விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் இப்படி பேசுவது ஒன்றும் புதியது அல்ல; ஆனால் நடைமுறையில் ஆர்.எஸ்.எஸ்.-ம் அதன் பரிவார அமைப்புகளும் சனாதன தர்மத்தை தூக்கிப் பிடித்து ஜாதிய- மத பிளவுகளை மட்டுமே நம்புகின்றன என்கின்றன விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications