இனி எல்லா ஊழியருக்கும் ஒரே மாதிரி அடிப்படை ஊதியம்.. அனைத்து துறை பெண்களுக்கும் நைட் ஷிப்ட்: நிர்மலா
டெல்லி: அனைத்து துறைகளிலும் இரவு ஷிப்ட் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தலாம் என்றும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் நிதி பேக்கேஜ் தொடர்பாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக, இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார் நிர்மலா சீதாராமன்.
இன்று விவசாயத்துறை, புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக, உள்ளிட்ட 9 வகை அறிவிப்புகள் வெளியிடுவதாக அவர் தெரிவித்துவிட்டு, பேட்டியை ஆரம்பித்தார்.

தொழிலாளர் நலம்
தனது பேட்டியின்போது, தொழிலாளர் நலம் குறித்து அவர் பேசுகையில் கூறியதை பாருங்கள்: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைத்திட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் சீராக இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளோம்.

அடிப்படை ஊதியம்
தற்போது 30 சதவீத ஊழியர்களுக்கு மட்டும் தான் அடிப்படை ஊதியம் என்பது நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதை அனைத்து ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தி உள்ளோம். அதாவது இனிமேல், அடிப்படை ஊதியம் 100 சதவீத ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். அதைவிட குறைவான ஊதியத்தை நிறுவனங்கள் கொடுக்க முடியாது.

பெண்களுக்கு நைட் ஷிப்ட்
அனைத்து வகையான துறைகளிலும் பெண்களுக்கு இரவு பணி அனுமதிக்கப்பட வேண்டும். இதற்காக கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது கட்டாயம். சாலையோர தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குடும்பம்
இதனிடையே பெண்களுக்கு இரவு ஷிப்ட் என்பது, குடும்ப வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. குழந்தைகளை கவனிப்பது பாதிக்கப்படும், இது தொழிலாளர் நலனுக்கு எதிரானதாக போய்விடும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருவதை பார்க்க முடிகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications