லோக்சபாவில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு - மழைக்கால கூட்டத்தொடரை புறக்கணிக்க முடிவு
டெல்லி: ராஜ்யசபா கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறும் வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறி எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று ராஜ்யசபாவில் இருந்தும் லோக்சபாவில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அனல் பறந்தது.
மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள் ராஜ்யசபாவில் ஞாயிறன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி எம்பிக்கள் காகிதங்களை கிழித்து அவையின் துணைத் தலைவர் ஹரிவன் மீது வீச முயன்றதால் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
அவையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டேரீக் பிரையன், டோலா சென், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜீவ் சத்சவ், சயத் நசீர் ஹூசேன், ரிபுன் போரா, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கேகே. ராகேஷ், இளமாறம் கரீம் ஆகியோரை கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு.

விடிய விடிய தர்ணா
சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழுக்கமிட்டதால், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே செல்லாமல் இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்து விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்கட்சிகள் புறக்கணிப்பு முடிவு
இன்றைய காலை கூடிய ராஜ்யசபாவில் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். இல்லையெனில் கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் என்று கூறினார்.

வருத்தம் கேட்டால் பரிசீலனை
அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால், அவர்களை மீண்டும் அவைக்குள் அனுமதிப்பது பற்றி அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.

எம்பிக்கள் வெளிநடப்பு
இதையடுத்து பேசிய வெங்கையா நாயுடு, ராஜ்யசபாவில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. என்றும் இந்த நடவடிக்கை எம்.பிக்களுக்கு எதிரானது அல்ல. அவர்களது செயல்பாடுகளுக்கு எதிரானது என்றார். ராஜ்யசபா துணைத்தலைவர் 13 முறை கேட்டுக் கொண்டு எம்.பிக்கள் தங்கள் இருக்கைகளுக்கு செல்ல மறுத்துள்ளனர். இது ஆரோக்கியமான விஷயமல்ல என்றும் கூறினார். இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெங்கையா நாயுடு வேண்டுகோள்
அப்போது பேசிய வெங்கய்ய நாயுடு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்யும் முடிவை மறு பரிசீலனை செய்து அவை நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்கும் மனநிலையில் எதிர்கட்சி எம்பிக்கள் இல்லை.

சஸ்பெண்ட் எம்எல்ஏக்கள் போராட்டம் வாபஸ்
ராஜ்யசபா காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும் போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறும்வரை அவைக்குள் வரப்போவதில்லை என்று தெரிவித்தார்.கூட்டத்தொடரைப் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் பங்கேற்கும் ராஜ்யசபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பிக்களும் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

லோக்சபா எதிர்கட்சியினர் வெளிநடப்பு
இதனிடையே பிற்பகலில் லோக்சபா கூடியதும் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 8 ராஜ்யசபா எம்பிக்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெறக்கோரியும் வெளிநடப்பு செய்தனர். எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெறாவிட்டால் மழைக்கால கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்த எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து பேசினர். இந்த சூழ்நிலையில் எதிர்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஓம்.பிர்லா சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications