ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு- குடியுரிமை சட்டத்தை நிறுத்தி வைக்க வலியுறுத்தல்!
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்; போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கைவிட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தினர்.
டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை மக்கள் ஏற்கவில்லை என்பதால் திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் சோனியா காந்தி கூறியதாவது:
வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் நிலைமை மோசமாகி வருகிறது. போராடுகிற மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து மாணவர்களை கொடூரமாக போலீசார் தாக்கியிருப்பது கண்டனத்துக்குரியது. மாணவிகளை விடுதிகளில் இருந்து இழுத்து வந்து தாக்கி உள்ளனர்.
ஆகையால் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.
சோனியா காந்தி தலைமையில் திமுகவின் டி.ஆர். பாலு, ஆர்ஜேடியின் மனோஜ் குமார் ஜா, சிபிஐ பொதுச்செயலாளர் டி. ராஜா, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸின் டெரெக் ஓ பிரைன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். இதனிடையே பகுஜன் சமாஜ் கட்சியினர் நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications