14 பேர் சஸ்பெண்ட்-லோக்சபா, ராஜ்யசபா முடக்கம்-நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்
டெல்லி: நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பியதால் 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தால் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் இன்று எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டன. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார்.
நாடாளுமன்றத்துக்குள் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது. நாடாளுமன்ற வளாகத்துக்கும் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் புகை பொருட்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ள இத்தாக்குதல் குறித்து பிரதமர் மோடி அல்லது மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் தரக் கோரி லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக்சபா, ராஜ்யசபாவில் மொத்தம் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ராஜ்யசபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லோக்சபாவில் திமுகவின் கனிமொழி உள்ளிட்ட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்களும் பங்கேற்றனர். அப்போது கைகளில் பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்றார்.
லோக்சபா, ராஜ்யசபா முடக்கம்: இதனிடையே இன்று காலை லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இதேபோல ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்யசபா நடவடிக்கைகளும் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் பகல் 2 மணிக்கு இரு சபைகளும் கூடின. அப்போதும் இரு சபைகளிலும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications