ராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் - லோக்சபா கூட்டத்தையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு
டெல்லி: ராஜ்யசபாவில் 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராகவும் வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் லோக்சபா கூட்டத்தையும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்களை மரப்புப் படி விவாதிக்காமல் முறைகேடாக மத்திய அரசு நிறைவேற்றியது என்பது எதிர்க்கட்சிகளின் புகார். இதனால் ஞாயிற்றுக்கிழமையன்று ராஜ்யசபாவில் பெரும் அமளி ஏற்பட்டது.

ராஜ்யசபா எம்.பிக்கள் சஸ்பெண்ட்
இந்த அமளியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரெய்ன் உட்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த 8 எம்.பிக்களும் தங்களது சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

ராஜ்யசபா புறக்கணிப்பு
இதனிடையே ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷும் தாமும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்போம் என அறிவித்தார். இன்னொரு பக்கம், எம்.பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறும் வரை ராஜ்யசபா நடவடிக்கைகளைப் புறக்கணிப்போம் என எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருக்கின்றன.

லோக்சபாவில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
இந்நிலையில் லோக்சபாவில் காங். குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், லோக்சபாவும் ராஜ்யசபாவும் இரட்டை குழந்தைகள்.. ஒரு சபையில் வருந்தத்தக்க நிகழ்வுகள் நடைபெற்றால் இன்னொரு சபைக்கும் வருத்தம் ஏற்படும். எங்களைப் பொறுத்தரவை வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு இந்த மசோதாக்களை திரும்பப் பெற்றால் சபையை தொடர்ந்து நடத்தலாம். இல்லை எனில் நாங்கள் சபை நடவடிக்கைகளை புறக்கணிக்கிறோம் என்றார்.

லோக்சபா நடவடிக்கைகள் புறக்கணிப்பு
இதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகால் ஜோஷி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், இன்னொரு சபை நிகழ்வுகளை மக்களவையில் விவாதிக்கக் கூடாது. இப்படி விவாதித்துக் கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது என சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் வேளாண் மசோதாக்களுக்கு எதிராகவும் 8 ராஜ்யசபா எம்.பிக்கள் மீதான நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் லோக்சபா கூட்டத்தைப் புறக்கணித்தன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications