Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"செந்தில் பாலாஜியை கைது செய்வது எங்கள் நோக்கமல்ல.." உச்ச நீதிமன்றத்தில் அமலாக்க துறை சொன்ன பாயிண்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் இன்று டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜு, தமிழக அரசு சார்பில் ஆஜரான கபில் சிபல் ஆகியோர் இன்றைய தினம் பல முக்கிய வாதங்களை முன்வைத்தனர். அப்போது ஒரு கட்டத்தில் செந்தில் பாலாஜியை கைது செய்வது எங்கள் நோக்கமில்லை என்றும் அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகச் சொல்லிக் கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டு சில நாட்கள் வரை தொடர்ந்தது. இந்தச் சோதனை அப்போது தமிழகம் முழுக்க பரபரப்பைக் கிளப்பியது. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Our intention is not arresting Senthil Balaji but to proceed investigation says ED in Tasmac case

வழக்கு விசாரணை

இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இன்றைய தினம் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜு, தமிழக அரசு சார்பில் ஆஜரான கபில் சிபல் ஆகியோர் இன்றைய தினம் பல முக்கிய வாதங்களை முன்வைத்தனர். காலையில் வழக்கு விசாரணை நடந்த நிலையில், மதிய இடைவெளிக்குப் பிறகும் வாதங்கள் தொடர்ந்தன.

அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான ராஜு, சோதனை மேற்கொள்ள அமலாக்கத் துறை அதிகாரிகளின் சட்ட விதிமுறைகள் குறித்து பல்வேறு கருத்துகளை அவர் முன்வைத்தார். அப்போது, இசிஐஆர் எனப்படும் தகவல் குறிப்பில் செந்தில் பாலாஜி பெயர் இடம் பெற்று இருப்பதாகத் தலைமை நீதிபதி கவாய் குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளாரா என்றும் கேள்வி எழுப்பினர்.

செந்தில் பாலாஜி

அதற்குப் பதிலளித்த அமலாக்கத் துறை வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி கைது செய்யப்படவில்லை. அதேநேரம் வேறு ஒரு வழக்கு விசாரணையில், பணம் பெற்றதாக அவர் கைது செய்யப்பட்டார். அதேநேரம் இந்த விவகாரத்தில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகச் சில ஆவணங்களில் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே இசிஐஆர் எனப்படும் தகவல் குறிப்பில் சேர்க்கப்பட்டது. அதேநேரம் இந்த வழக்கில் இப்போது அவரை கைது செய்யும் நோக்கமில்லை" என்று கூறினார்.

பரபர வாதம்

ராஜு மேலும், "ஏற்கனவே மாநில அரசு 47 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. ஆனாலும், ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதால் அதை அமலாக்கத்துறை விசாரிக்கலாம் . பெரிய அளவிலான முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளன. நாங்கள் பணமோசடி குறித்து மட்டுமே விசாரிக்கிறோம்" என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கவாய், "இங்குக் கூட்டாட்சி என்ன ஆனது? அமலாக்கத் துறை செயல்பாடுகள் மாநில அரசின் விசாரணை உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருக்கிறதே... உங்களுக்குச் சந்தேகம் வரும் போதெல்லாம் மாநில அரசு முறையாக விசாரிக்கவில்லை என்று நினைத்த நீங்கள் நேரடியாக விசாரிப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

இடைக்காலத் தடை

இப்படி இன்று நாள் முழுக்க இரு தரப்பும் பல்வேறு வாதங்களை முன்வைத்தது. முன்னதாக இந்த விவகாரத்தை அமலாக்கத் துறை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், அதை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+