29,000 குளிர்பதன கிடங்கு.. 45,000 ஐஸ் ரெப்ரிஜிரேட்டர்.. தடுப்பூசி சப்ளைக்கு விறுவிறு ஏற்பாடுகள்
டெல்லி: கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. 29000 குளிர்பதன கிடங்கு, 45,000 ஐஸ் ரெப்ரிஜிரேட்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. எனவே யாருக்கு எப்படி தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற திட்டமிடலில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக உள்ளன.

தடுப்பூசி போட விரும்புவோர் பதிவு செய்ய வேண்டிய விவரங்களையும் மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், தடுப்பூசியை உரிய வகையில் கொண்டு சேர்க்க 29 ஆயிரம் குளிர்பதன கிட்டங்கிகள் தயார் நிலையில் உள்ளன. 45 ஆயிரம், ஐஸ் லைன் ரெப்ரிஜிரேட்டர்கள் உள்ளன.
240 நடமாடும் கூலர்கள், 70 நடமாடும் பிரீசர்கள், 41 ஆயிரம் டீப் ப்ரீசர், 300 சோலார் ரிப்ரிஜிரேட்டர் தயார் நிலையில் உள்ளன. 23 அமைச்சரகங்கள் இணைந்து தடுப்பூசியை மக்களிடம் கொண்டு செல்ல உள்ளன.
ஆஷா தொழிலாளர்களுக்கும், பிற சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசியை பத்திரமாக பாதுகாப்பது, இடப் பெயர்வு செய்வது போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. சில நேரங்களில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி லேசான பின்விளைவுகளை கொடுக்க கூடும். இதை எதிர்கொள்ளவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரிட்டன் போன்ற ஏற்கனவே, தடுப்பூசி திட்டத்தை துவங்கிய நாடுகளில், லேசான பின் விளைவுகள் ஏற்பட்டன. முதல் நாளிலேயே இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications