26ம் தேதிவரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது.. ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன்
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு வரும் 26ம் தேதி வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், ஏற்கனவே சிபிஐ தாக்கல் செய்த வழக்கில், சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரது சிபிஐ கஸ்டடி காலம் 26ம் தேதிதான் முடிவடைகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை மற்றும், சிபிஐ விசாரித்து வருகின்றன. இதில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் சிதம்பரத்தை கடந்த புதன்கிழமை இரவோடு இரவாக சிபிஐ கைது செய்தது நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது வரும் 26ம் தேதி திங்கள்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு சிபிஐ கஸ்டடியில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை தன்னை கைது செய்யாமல் இருக்க, சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவர் தரப்பில், கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங் ஆஜராகி வாதிட்டனர். நீதிபதிகள் பானுமதி போபண்ணா அமர்வு விசாரித்தது.
அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா ஆஜராகியிருந்தார். சிதம்பரத்துக்கு எதிராக பல்வேறு ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது, "சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது தங்களை சந்தித்ததாக இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு லஞ்சம் அளிக்க சிதம்பரம் வற்புறுத்தியதாகவும் இந்திராணி முகர்ஜி தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார். ஆதாரங்கள் அடிப்படையில் தான் சிதம்பரத்துக்கு எதிராக விசாரணை நடக்கிறதே, தவிர அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடையாது" என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், வரும் 26-ம் தேதி வரை சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கைதுசெய்ய இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஆனால் 26ம் தேதிவரை வரை சிதம்பரம் சிபிஐ கஸ்டடியில் இருக்கிறார். எனவே இந்த இடைக்கால முன் ஜாமீனால் அவருக்கு பெரிய பலன் கிடையாது. ஒரு வேளை திங்கள்கிழமைக்கு பிறகு முன் ஜாமீன் கிடைத்தால்தான், சிதம்பரத்துக்கு அது பலனளிக்கக் கூடும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications